பணி நிரந்தரம் செய்யாமல் அமைச்சர் பேரம் பேசுவதா?
பகுதி நேர ஆசிரியர்கள், மாதம் 5,000 ரூபாய் என்ற குறைந்த ஊதியத்தில் பணியில் சேர்ந்து, 13 ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யப் படவில்லை. ஆண்டுக்கு சராசரியாக 576 ரூபாய் என, 13 ஆண்டுகளில் 7,500 ரூபாய் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை அழைத்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், பணி நிரந்தரம் வழங்குவதற்கு பதிலாக, 2,500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்குவதாக பேரம் பேசுகிறார். அதை ஏற்க மறுத்து போராட்டம் நடத்தினால், ஆசிரியர்களை கைது செய்கின்றனர். ஆசிரியர்களுக்கு எதிரான அடக்குமுறை, துரோகங்களை தி.மு.க., அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்ற வேண்டும்.
- அன்புமணி
தலைவர், பா.ம.க.,
வாசகர் கருத்து (1)
Vasan - ,இந்தியா
17 ஜன,2026 - 12:06 Report Abuse
ஆசிரியர்களை பிச்சைக்காரர்கள் போல் நடத்தும் அரசியல்வாதிகள், தேர்தலில் தண்டிக்கப்படுவார்கள். 0
0
Reply
மேலும்
-
குடியரசு தின அணிவகுப்பு: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்!
-
யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
-
அன்னுார் வட்டாரத்தில் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
-
உங்களுக்கு செட் ஆகல சார்.. வெயிட் பண்ணுங்க: இலவசங்கள் அறிவித்த இபிஎஸ்சுக்கு டிஆர்பி ராஜா பதில்
-
ஈரானில் தொடரும் வன்முறை; விமானத்தில் டில்லி திரும்பிய இந்தியர்கள்!
-
பொலிவுறு நகரம் இந்தூரில் சுத்தமான குடிநீர் இல்லை; ராகுல் விமர்சனம்
Advertisement
Advertisement