களைகட்டிய மது விற்பனை: 2 நாட்களில் ரூ.435 கோடி
சென்னை: தமிழக டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், வார மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில், அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனை நடக்கிறது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதனால், சொந்த ஊர்களுக்கு சென்ற மது பிரியர்கள், நண்பர்களுடன் சேர்ந்து, மது விருந்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு, நேற்று மது கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் மது பிரியர்கள் வழக்கத்தை விட அதிகமாக, பொங்கலுக்கு முந்தைய நாளும், பொங்கலன்றும் மதுபானங்கள் வாங்கினர்.
இதையடுத்து கடந்த, 14ம் தேதி, 184 கோடி ரூபாய், பொங்கலன்று, 251 கோடி ரூபாய் என, இரு தினங்களில் மட்டும், 435 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
பொங்கலன்று சென்னை மண்டலத்தில், 56 கோடி ரூபாய்; திருச்சி, 50 கோடி; மதுரை, 54 கோடி; சேலம், 46 கோடி; கோவை மண்டலத்தில், 45 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
கடந்த இரு தினங்களில் நடந்த விற்பனையால் மதிப்பு கூட்டு வரி மற்றும் ஆயத்தீர்வை வரி வாயிலாக தமிழக அரசுக்கு, 350 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
யாரோ போதை ஒழிப்புக்காக நடை பயணம் போனார், அதற்கு ஒருவர் கொடியாட்டினாராம் மது எல்லாம்போதையில் சேராத, ஆரோக்கிய பணம் , ஒவ்வொரு பண்டிகைக்கும் கோடிகள் சம்பாதித்துத்தரும் காமதேனு இத்தனை குடும்பத் தாய்மார்களும் அந்த 2/3 நாட்களில் இட்ட சாபம் யாரைச் சென்றடையும்?
மாடல் 1.0 இப்படி என்றால் மாடல் 2.0 இன்னும் கொடூரமாக இருக்கும். 1.0 வில் கட்டாய மத மாற்றத்துக்கான பிரச்சாரம் போல அல்லாமல் கட்டாய மது மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை என்று கூட வரும். பள்ளி மாணவர்களுக்கு பார் எப்படி இயங்குகிறது, எப்படி மதுவை கலக்க வேண்டும் போன்ற செய்முறை பயிற்சி வகுப்புகள் நடக்கும். டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிய ரசீது ஒவ்வொன்றுக்கும் நீட் முன்னுரிமை புள்ளிகள் கொடுக்கப்படும்.
அப்பாவின் டாஸ்மாக் கின்னஸ் சாதனையை நோக்கி புயல்வேகப் பயணம். அப்பாவின் புண்ணியத்தில் தமிழகம் விரைவில் இரண்டாவது சோமாலியா ஆக்கப்படும். அப்பா குடும்பம் மட்டும் லண்டனில் செட்டில் ஆகி விடும். இளவரசர் அடிக்கடி லண்டன் - துபாய் பயணம் மேற்கொள்வார்.
வெறும் 450 கோடியா? டாஸ்மாக் சரியா வேலை செய்யலேன்னு தோணுது குடுத்தது கிட்டத்தட்ட ஐயாயிரம் கோடி ஆனா திரும்பி வந்தது அதுலே பத்துலே ஒரு பங்கா கொறஞ்ச பட்சம் பாதிக்கு பாதியாவது வந்தாதான் நம்ம மாடலுக்கு வெற்றி
திருவள்ளுவரை சாட்சிக்கு கூப்பிடணுமே. எறா மீசை கூட்டம் திருக்குறள் கொளுத்தப்படவேண்டிய புத்தகம்னு இங்க ஊளை விடுவான் இலங்கை தமிழர்கள் இங்கிலாந்திற்கு பேச கூப்பிட்டால் கூச்சமே இல்லாமல் திருக்குறளை புகழுவான்.மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை