பணிக்கு சேர்ந்த முதல் நாளே பணத்துடன் ஊழியர் ஓட்டம்
வேளச்சேரி: வேளச்சேரியில் உள்ள பெட்ரோல் 'பங்க்'கில் பணிக்கு சேர்ந்த அன்றே, வசூலான 34,500 ரூபாயுடன் ஓடிய ஊழியரை, போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன், 40. இவர், கடந்த 8ம் தேதி, வேளச்சேரி விரைவு சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பணிக்கு சேர்ந்தார். மூன்று மணி நேரம் மட்டுமே பணிபுரிந்த அவர், டீ குடித்து வருவதாக சென்றவர், மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. வசூலான 34,500 ரூபாயுடன் மாயமானார்.
'பங்க்' மேலாளர் காளியப்பன் புகாரையடுத்து, வேளச்சேரி போலீசார் விசாரித்து, செங்கல்பட்டில் அவரது வீட்டில் வைத்து, நேற்று அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்திட்டம் கொண்டு வரப்படுமா: இபிஎஸ் பேட்டி
-
பாலிவுட் டைரக்டரிடம் ரூ.2.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு
-
மஹாராஷ்டிரா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; அடையாள மை அழிவதாக உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
-
நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை; இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடிய முதல்வர் ஸ்டாலின்
-
விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகளில் குறுக்கிடும் மம்தா அரசு; அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
வளரும் நாடுகள் புதிய பாதைகளை உருவாக்க வேண்டிய தருணம்; பிரதமர் மோடி
Advertisement
Advertisement