நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை; இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை. உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை என்ற பாடலை VIBE WITH MKS கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்களுடன் இணைந்து முதல்வர் ஸ்டாலின் பாடிய வீடியோ வெளியாகி உள்ளது.
VIBE WITH MKS நிகழ்ச்சியில் இசைக்கலைஞர்கள், பாடகர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். ஏற்கனவே, விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய நிலையில் தற்போது இசைக்கலைஞர்களுடன் கலந்துரையாடி முதல்வர் பாடி அசத்தும் வீடியோ வெளியானது. இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை. உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை என்ற பாடலை முதல்வர் ஸ்டாலின் இசை கலைஞர் உடன் இணைந்து பாடியுள்ளார்.
“நான் எம்ஜிஆர் பாடல்களை விரும்பிக் கேட்பேன்; குறிப்பாக 'அச்சம் என்பது மடமையடா' பாடல் மிகவும் பிடிக்கும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த கலந்துரையாடல் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
தமிழகத்தின் ஆன்மா அதன் இசையின் மூலம் பேசுகிறது. அது ஊக்கம் அளிக்கிறது, பாதுகாக்கிறது, பரிணமிக்கிறது. நமது திறமையான இசைக்கலைஞர்கள் சிலருடன் அவர்களின் கைவினை, ஆற்றல், உலகம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள நேரத்தைச் செலவிட்டோம்.
அவர்கள் இசையை மட்டும் உருவாக்கவில்லை; அவர்கள் நமது பாரம்பரியத்தை உயிருடன் வைத்திருக்கிறார்கள். அதன் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள். கலாசாரத்தைக் கொண்டாடும், ஆர்வத்தை மதிக்கும் மற்றும் உண்மையான கலைத்திறனை அங்கீகரிக்கும் உரையாடல்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இசை கலைஞர்களுடன் இணைந்து முதல்வர் ஸ்டாலின் பாடிய பாடலின் வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.
https://x.com/mkstalin/status/2011702618524172777?t=pd1JbYAonJzSfpq1Yko13g&s=19
சினிமாவையே முன்னிறுத்தி அரசியலில் ஆதாயம் தேடிக்கொண்ட தமிழ் நாட்டையே பாழாக்கிய டிக்கட்டே வாங்காமல் ரயிலேறி சென்னை வந்த திருட்டு திராவிட கூட்டத்திற்கு சினிமா ஒரு கேடா
நீ இருக்கும் இடத்தில் நிம்மதில்லை
ஜலால் பாய்க்கு நல்ல நகைச்சுவை வருகிறது, அது வளரவில்லை பாய், விக் அது.
தமிழகத்தை விட்டு அந்த திமுக இல்லாமல் போனாலே நிம்மதி கிடைக்கும் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும்.
பாட்டு வேறு குறைச்சலா? என்ன கன்றாவியோ ?
தோட்டம் காக்க போட்ட வேலி பயிரை தின்பதோ அதை கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ என்றார் பாடலை எம்ஜிஆர் இவிங்கப்பாவுக்காகவே பாடினார்.
நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை - இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் - தெய்வத்தின் தெய்வம் ஆம் தெய்வத்தின் தெய்வம் - தேவரின் தெய்வம் ஆம் தேவரின் தெய்வம் குடியிருக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் விஷயத்தில் தவறு செய்தவரை தெய்வத்தின் தெய்வம் பாடலை பாடி மன்றாடி உருக செய்தது, தேவரின் தெய்வம் நிகழ்த்தும் திருவிளையாடலே சுப்பன் முருகன் என்றால் சும்மாவா செமையாய் அதிருதுல . முதல்வர் நினைத்திருந்தால் பகுத்தறிவு பாடல்களை - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் - பாடி பெரியாரிய திராவிட கருத்துக்களை நினைவு கூர்ந்திருக்கலாம் .ஆனால் அவர் பாடியது தெய்வத்தின் தெய்வம் படப்பாடல் .இது தான் பிரபஞ்ச விதி . பிரபஞ்சநீதி என்பது நம் மானுட ர் பின்பற்றும் மானுட நீதி அல்ல. நம் தெருமுனையிலோஅல்லது நீதிமன்றத்திலோ நிகழும் நீதி அல்ல அல்ல . அது முற்றிலும் வேறு. அது நம் மானிடர் புரிதலுக்கு அப்பாற்பட்டது. அதை நாமனைவரும் கண்கூடாகவே தீபத்தூண் விஷயத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆக ஒரு,,, உண்மை
திரைக்கூத்து ன்னு ஒண்ணு இருக்கு. அது மாதிரி இது தேர்தல்லு கூத்து. வக்கணையா சேய்ய தெரியாட்டாலும் வக்கணையா பேசி வைப்போம். மல்லையா கிரிக்கெட் காரன்களை ஏலத்தில் எடுத்து அவனுங்க ஜெயிச்ச போட்டியில, அந்த மல்லையா ஒரு நாலு பொம்மனாட்டிகள் தோள் மேல கை போட்டுக்கொண்டு போஸ் குடுப்பான். அதை பாக்குரப்பெல்லாம் மனசு நெருடலாக இருக்கும். அப்புறம்தான் அவன் மகா கொள்ளைக்காரன் னு தெரிஞ்சுது. அத்தோட அந்த ஆளும் தப்பிக்கணும்ன்னு ஓடியும் போய்ட்டான். இப்போ எம் கே எஸ் பாத்தாக்க அந்த ஞாபகம் வந்து தொலைக்குது.
பாடல் செலெக்ஷனை பார்த்தீர்களா? இவர் என்னதான் செய்தாலும் தவிக்க சிறுபான்மையினரின் ஓட்டுக்களை பிரித்தே தீரும்மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்