மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

காஞ்சிபுரம்: வாக்காளர் பட்டியலில் விடுபட்ட மூன்றாம் பாலினத்தவரின் பெயர் சேர்க்கும் சி றப்பு முகாம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து தாலுகா அலுவலகங்களில் நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிந்து, கடந்த டிச.,19ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 11.26 லட்சம் வாக்காளர் விபரங்கள் வெளியிடப்பட்டன.

மாவட்டம் முழுதும், 185 மூன்றாம் பாலினத்தவர்கள், வாக்கா ளர் பட்டியலில் உள்ளனர். இவர்களில் விடுபட்டவர்களையும் பட்டியலில் சேர்க்கும் விதமாக, ஐந்து தாலுகா அலுவலகங் களிலும் பெயர் சேர்ப்பு முகாம் ந டந்தது.

இதில், மூன்றாம் பாலினத்தவர், 8 பேர் தங்கள் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை, தேர்தல் அதி காரிகளிடம் வழங்கினர்.

Advertisement