கடல்மங்கலம் வழியாக பேருந்து சேவை துவக்கம்
உத்திரமேரூர்: உத்திரமேரூரில் இருந்து, கடல்மங்கலம், சாலவாக்கம் வழியாக அரசு பேருந்து சேவை நேற்று துவங்கப்பட்டது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடல்மங்கலம், தோட்டநாவல், சடச்சிவாக்கம், மல்லியங்கரணை உள்ளிட்ட கிராமங்கள் செங்கல்பட்டு செல்ல நேரடி போக்குவரத்து வசதி இல்லாத நிலை நீண்ட காலமாக இருந்தது.
இப்பகுதியினர், உத்திரமேரூர் அல்லது நெல்வாய் கூட்டுச்சாலை சென்று அங்கிருந்து பேருந்து பிடித்து செங்கல்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், உத்திரமேரூர்- செங்கல்பட்டு இடையே நேரடி போக்குவரத்து வசதி ஏற்படுத்த இக்கிராம வாசிகள் வலியுறுத்தி வந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, உத்திரமேரூரில் இருந்து, கடல்மங்கலம், குண்ணவாக்கம், சாலவாக்கம், எஸ்.மாம்பாக்கம், சிறுபினாயூர், வடபாதி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செங்கல்பட்டுக்கு தினமும் நான்கு முறை இயங்கும் வகையில், தடம் எண்; 68 எஸ்., அரசு பேருந்து சேவை நேற்று துவங்கப்பட்டது.
மேலும்
-
சம்பள உயர்வு அறிவிப்பு கண்துடைப்பு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்
-
இயற்கையோடு இணையும் இளம் விவசாயிகள் மணப்பாறையில் விவசாய புரட்சி
-
ஓய்வூதியம் இல்லாமல் அவதிப்படும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள்
-
தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்
-
மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்