ரூ.10 கேட்டு தகராறு பிளேடால் கழுத்தில் கீறல்
பொதட்டூர்பேட்டை: செலவுக்காக 10 ரூபாய் கேட்டு தர மறுத்தவரின் கழுத்தில் பிளேடால் கிழித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பொதட்டூர்பேட்டை அடுத்த பொம்மராஜபேட்டையைச் சேர்ந்த பாஸ்கர், 30, என்பவர், நேற்று படவேட்டம்மன் கோவில் வளாகத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த பழனி, 38, என்பவர் அங்கு வந்தார். பாஸ்கரிடம், 10 ரூபாய் தரும்படி பழனி கேட்டுள்ளார்.
தரமறுத்த பாஸ்கருடன், பழனி வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், பழனி தன் கையில் வைத்திருந்த பிளேடால், பாஸ்கரின் கழுத்தில் கீறியுள்ளார். இதில், காயமடைந்த பாஸ்கர், பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது
Advertisement
Advertisement