மின்சாரம் தாக்கி சிறுவன் பலி விருத்தாசலம் அருகே சோகம்
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மின் கம்பத்தில் ஏறிய சிறுவன், மின்சாரம் தாக்கி பலியானது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், ஆலடி அடுத்த இருளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 17. இவர் உளுந்துார்பேட்டை அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு டிப்ளமோ படித்து வந்தார்.
இவர் அந்த பகுதியில் உள்ள ஒருவது வீட்டில் மின் பழுது நீக்கம் செய்ய, நேற்று மாலை 5:00 மணியளவில், டிரான்பார்மரை நிறுத்தி விட்டு, மின்கம்பத்தில் ஏணியின் மூலம் ஏறி, சரி செய்ய முயன்றுள்ளார்.
அப்போது, அந்த கம்பத்தில் சென்ற உயர் மின் அழுத்த கம்பி, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைமீது மீது உரசியது.
அதில், சிறுவன் மின்கம்பத்தில் இருந்து துாக்கி எரியப்பட்டார். இதில், படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து சென்ற ஆலடி போலீசார், சிறுவனின் சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
சம்பள உயர்வு அறிவிப்பு கண்துடைப்பு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்
-
இயற்கையோடு இணையும் இளம் விவசாயிகள் மணப்பாறையில் விவசாய புரட்சி
-
ஓய்வூதியம் இல்லாமல் அவதிப்படும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள்
-
தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்
-
மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்