குளத்தை அழகுபடுத்தும் பணி தீவிரம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே குளத்தை அழகுபடுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு ஊராட்சியில் கடலுார-் பண்ருட்டி சாலையை ஒட்டி ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது.
இந்த குளத்தில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்திருந்தன. கடந்த, 6 மாதத்துக்கு முன் குளத்தில் இருந்த ஆகாயதாமரை செடிகளை அகற்றி துார் வாரினர்.
இதனால் கடந்த மாதம் பெய்த மழையில் குளம் நிரம்பியது. தொடர்ந்து குளத்தை துாய்மையாக பராமரிப்பதோடு நடைபயிற்சி செல்ல குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தற்போது குளத்தை பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
அனைத்து குளங்களையும் வரக்கால்பட்டு குளம் போல் பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
Advertisement
Advertisement