குளத்தை அழகுபடுத்தும் பணி தீவிரம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே குளத்தை அழகுபடுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு ஊராட்சியில் கடலுார-் பண்ருட்டி சாலையை ஒட்டி ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது.

இந்த குளத்தில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்திருந்தன. கடந்த, 6 மாதத்துக்கு முன் குளத்தில் இருந்த ஆகாயதாமரை செடிகளை அகற்றி துார் வாரினர்.

இதனால் கடந்த மாதம் பெய்த மழையில் குளம் நிரம்பியது. தொடர்ந்து குளத்தை துாய்மையாக பராமரிப்பதோடு நடைபயிற்சி செல்ல குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தற்போது குளத்தை பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

அனைத்து குளங்களையும் வரக்கால்பட்டு குளம் போல் பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement