அனைத்து பணியாளர் நலச்சங்கத்தினர் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
கரூர்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், அனைத்து பணியாளர்கள் நலச்சங்கத்தினர், நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பணியா-ளர்களுக்கும், அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நகர்ப்புற பணியாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். பெண் பணியாளர்
களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்க வேண்டும்.
ஈட்டிய விடுப்பு நிதி வழங்க வேண்டும். வெளி-யேற்றப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்-கைகளை வலியுறுத்தி, பணியாளர்கள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை துவக்-கினர்.கரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், மாவட்ட துணைத்தலைவர் கீதா தலைமையில், காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. நேற்று, இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நீடித்தது.
அதில், 25க்கும் மேற்பட்ட பணியாளர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.
மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்