பிஎச்.டி., படிக்க வைத்துள்ளேன்; பால்வாடிக்கு போய் விடாதீர்கள்: தாவலை தடுக்க திருமாவளவன் கடும் முயற்சி
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில், மாவட்டச் செயலர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருப்போரை, அக்கட்சித் தலைவர் திருமாவளவன் சமாதானப்படுத்தி வருகிறார்.
'இங்கு உங்களை எல்லாம் படிக்க வைத்து, பட்டதாரி ஆக்கி இருக்கிறேன்; த.வெ.க., போன்ற கட்சியில் சேர்ந்து, பால்வாடியில் படிக்கும் நிலைக்கு ஆளாகி விடாதீர்கள்' என, அவர் கூறி வருகிறார்.
சமாதான முயற்சி
குறிப்பாக, 234 தொகுதிகளுக்கான மாவட்டச் செயலர்களை நியமித்து, சமீபத்தில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அப்போது அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலர்கள், அந்தந்த தொகுதியில் வாக்காளர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வேறு தொகுதியில் வாக்காளர்களாக இருப்பவர்களும், மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, வி.சி., நிர்வாகிகள் பலர், தலைமைக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளில் சேரவும் பேச்சு நடத்தி வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திருமாவளவன் இறங்கி உள்ளார். இதற்காக, ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும், சந்திக்கும் கட்சியினரிடமும், 'நடிகர் விஜய் கட்சிக்கு யாரும் தாவ வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
சமீபத்தில், கட்சி உள்ளரங்க கூட்டம் ஒன்றில் திருமாவளவன் பேசியுள்ளதாவது:அரசியலில், 35 ஆண்டுகளாக உங்களுக்கு, 'அ' போடச் சொல்லி கற்றுக் கொடுத்தவன் இந்த திருமாவளவன். அம்பேத்கர் அரசியலை விட்டுவிட்டு, சினிமாவில் பிரபலமாக இருப்பவர் திடீரென கட்சி ஆரம்பித்திருப்பதால், அவருடன் போகலாம் என முடிவு செய்யாதீர்கள்.
அனைவரும் தலைவர்
அரசியலில் உங்கள் அனுபவமே விஜய்க்கு கிடையாது; இப்போது அவர் பால்வாடி பையன். உங்களை நான், பட்டப் படிப்பு படிக்க வைத்து, பிஎச்.டி., முடித்து ஆளாக்கி வைத்திருக்கிறேன். நீங்கள் போய், பால்வாடி பள்ளியில் இருக்கக்கூடிய பையனை தலைவராக ஏற்கக் கூடாது.
இத்தனை ஆண்டுகளாக நீங்கள் படித்த அம்பேத்கர் என்ற பிஎச்.டி., படிப்புக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும். நீங்கள் போய் தான், அங்கு அரசியல் கற்று தர வேண்டிய நிலை இருக்கும். நம் கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் தலைவராக வளர்ந்திருக்கின்றனர். மேலும், அரசியல் விவாதத்தில் பங்கேற்கும் பலர், வி.சி.,யைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர்; இல்லையென்றால், இங்கிருந்து போனவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இதற்கிடையில், த.வெ.க.,வுக்கு போவதை தடுக்க, கட்சி நிர்வாகிகள் மட்டத்திலும் திருமாவளவன் பேச்சு நடத்தி வருகிறார். அதிருப்தியில் இருப்பவர்களுக்கு, கட்சியில் வேறு முக்கிய பதவிகள் தரப்படும் என்றும், யாரும் கட்சியை விட்டு த.வெ.க., போன்ற கட்சிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் திருமாவளவன் கூறி வருகிறார்.
அத்துடன், தி.மு.க., கூட்டணியில் பெறப்படும் தொகுதிகள் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளிலும் பதவிகள் வாங்கி தரப்படும் என்றும், அவர் உறுதி அளித்து வருவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
வி சி க உறுப்பினர்களை முறைத்தால் அடி, 10 கிரிமினல் வழக்குகளை வாங்கு உபதேசம் செய்த நீ, இப்போ கட்சியை விட்டு விஜய் கட்சில சேராதீர்கள் என சொல்ல உனக்கு என்ன அருகதை உள்ளது
ஆங்கிலம் தமிழ் கணிதம் போன்ற பாடங்கள் படித்து மதிப்பு எண் பெறுவது முக்கியம் இல்லை. இந்த படிப்புகள் வயிற்று பிழைப்பிற்கு. பள்ளியில் ஒழுக்கம் மாறல் பாட நூல் வைத்து இதிலும் தேர்ச்சி பெறவேண்டும் என்ற நிலை வந்தால்தான் சமூகத்தில் ஒழுக்கம் நிலவும். தரமற்ற அரசியல் தலைவர்கள் காணாமல் போவார்கள்.
ஆமாம் மதவாத அரசியலை கையில் எடுத்து நாட்டை நாசமாக்கும் திமுகவுன் காங்கிரஸ் சேராமல் இருந்தால் மதவாத திமுக அழியும் நாட்டில் மத பிரச்சனயே இருக்காது
திருமா நீ சிதம்பரம் போன்ற ஆன்மீக பூமியை நாசம் செய்யிது விட்டாய். காரணம் நீயும் , உன் கட்சியில் இருக்கும் பி எச் டி படித்த தருதலைகளும். நாட்டை குட்டிச்சுவர் ஆக்க உன்னால் படைக்கப்பட்ட இனங்கள். இந்த கும்பல் எங்கு போனால் என்ன ?
ப ம க, வி சி க போன்ற சாதிய கட்சிகள் பிறரை அண்டியே பிழைக்க வேண்டும்.
உனது புள்ளிங்கோ கஞ்சா பத்துவதிலும் சரக்கு அடிப்பதிலும் தான் PhD பண்ணிருக்கானுங்க மிஸ்டர் சரக்கு மிடுக்கு
பால்வாடிக்கு போகிறார்கள் என்றால் நீங்க குறுக்கு வழியில் படிக்கவைத்திருப்பதாக அர்த்தம் திருமா . இப்போ சொல்லுங்க தப்பு எங்கே என்று
மத தீவிரவாதிகளை விட இவர்கள் எவ்வளவோ மேல், மத தீவிரவாதம் ஒரு நாட்டையே அழித்துவிடும், இங்குள்ள ஹிந்து தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா கிறிஸ்டின் நாட்டில் இருந்து டாலர் வரணும், துபாயில் இருந்து 700 கோடி டொனேஷன் தினார் எல்லாம் வரணும் ஆனால் முஸ்லீம் கிருஷ்டியன் கூடாது என்னடா உங்க நியாயம்
எது எவ்வளவோ மேல்? மொறச்சான் அடிச்சேன்னு சொல்றதா?
இத்தனை நாளா நீ ஒரு புள்ளிங்கோ பார்ட்டின்னு எங்களுக்கு தெரியாது மேன்! அதான் தாய் சிறுத்தைக்கு வக்காலத்து வாங்கிறியா?
க்ரூப் ஆளா நீ ?
இப்படி தனியா பொலம்புறமாதிரி வெச்சுட்டானே
தமிழகத்தில் இருக்கும் முக்கால்வாசி தறுதலைப் புள்ளிங்கோ பயபுள்ளைக பூரா திருமாவின் விசிக கட்சியை சேர்ந்தவர்களே. சமீபத்தில் திருத்தணியில் இரயிலில் வந்த ஒடிசாவை சேர்ந்த ஒரு அப்புராணி இளைஞரை கொடூரமாக வெட்டி அதை ரீல்ஸ் எடுத்து போட்டதும் கஞ்சா குடிக்கிகளான இவரின்
விசிக புள்ளிங்கோதான்! இப்படியிருக்கும் போது இவனுகளை இந்த திருமா PhD படிக்க வைத்தாராம். அடங்கமறு, அத்துமீறு, திமிறிஎழு, திருப்பிஅடி என்றும்
விடுதலை சிறுத்தை கட்சியின் தொண்டன் ஒவ்வொருத்தன் மீதும் பத்து வழக்குகளாவது இருக்க வேண்டும் என அந்த புள்ளிங்கோக்களுக்கு பாடம் எடுத்தவர்தான் இந்த குருமா இதுதான் இவர் அவனுகளை பி.எச்.டி படிக்க வைத்த லெட்சணம். இந்த ஆள் நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசுவதில் வேண்டுமானால் PhD முடித்திருப்பார். ஒருமுறை கருணாநிதி இவரை தனித் தொகுதியில் நிற்பவர்கள் பொதுத் தொகுதிக்கு ஆசைப்படக்கூடாது என்று நாக்கை பிடிங்கிக் கொள்வது போல் கேட்டார். அந்த கடுப்பில் இருந்த இந்த திருமா நம் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை ஜாதிக் கட்சி என்று இழிவு படுத்தியுள்ளார் கருணாநிதி. அவருக்கு வரும் தேர்தலில் விசிக தகுந்த பாடத்தை கற்பிக்கும் என்று வீர முழக்கமிட்டார். இன்று வைகோ போலவே இவரும் கேவலம் சீட்டுக்காக வெட்கமில்லாமல் திமுகவிடமே சரணாகதி அடைந்து விட்டார்.
மனிதனை மனிதனா பாருங்கள் நாடு உருப்படும்
வேங்கை வயல் சமாச்சாரத்தை விட்டுப்புட்டியளே.
அதை முதலில் உன் ஓனர் திருமாகிட்ட சொல்லு திகழு...