தை அமாவாசை முன்னோருக்கு தர்ப்பணம்
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் நேற்று, தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், மாதந்தோறும் அமாவாசை அன்று, திரளான பக்தர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். நேற்று தை அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே திருவள்ளூருக்கு வந்தனர்.
கோவில் வளாகத்தில் தங்கிய பக்தர்கள், நேற்று காலை ஹிருதாப நாசினி குளத்தில் புனித நீராடி, குளக்கரையில் முன்னோருக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பால், வெல்லம் ஆகியவற்றை குளத்தில் கரைத்து, நீண்ட வரிசையில் காத்திருந்து வீரராகவ பெருமாளை தரிசித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் மறுபூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு
-
பொங்கல் விடுமுறை நிறைவு பஸ் ஸ்டாண்டில் குவிந்த மக்கள்
-
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
சேந்தமங்கலம் கிழக்கில் சமுதாயக்கூடம் திறப்பு
-
தி.மு.க., சார்பில் மாட்டுவண்டி பந்தயம் ரூ.2.32 லட்சம் பரிசு தொகை வழங்கல்
-
கரூர் வட்டாரத்தில் கடும் பனி பொதுமக்கள் குளிரால் தவிப்பு
Advertisement
Advertisement