நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல்
ஊத்தங்கரை,: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார்.
மூத்த வழக்கறிஞர் ரங்கநாதன், ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் வஜ்ரவேல் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு, நீதிமன்ற வளாகத்தில் புது பானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு படையல் இட்டு வழிபட்டனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement