பாலமேடு ஜல்லிக்கட்டு: பசு, கார், டிராக்டர் பரிசு

பாலமேடு: பாலமேட்டில் ஜன.16ல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. நேற்று கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் மச்சவேல் தலைமையில் நடந்தது. செயலாளர் பிரபு, பொருளாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர்.

கமிட்டியினர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியை அரசு வழிகாட்டுதல், மாவட்ட நிர்வாக ஒத்துழைப்புடன் கிராம கமிட்டி நடத்துகிறது. துணை முதல்வர் உதயநிதி போட்டியை துவக்கி வைக்கிறார். சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக டிராக்டர், கார், 2ம் பரிசாக கன்றுடன் கூடிய நாட்டு பசு, டூவீலர்கள், பிரிட்ஜ், பீரோ, கட்டில், சைக்கிள், தங்க காசு, விலை உயர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும்.

டோக்கன் நம்பர் வரிசையில் காளைகள் அவிழ்த்து விடப்படும். பேரூராட்சி ஒத்துழைப்புடன் காலரிகள் கூடுதலாக அமைக்கப்படுகிறது. காளைகள், அதன் உரிமையாளர்கள், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் அனுமதித்த நேரத்திற்குள் பதிவு செய்த அனைத்து காளைகளையும் அவிழ்க்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

Advertisement