பாக்., மீது தரைப்படை தாக்குதலுக்கு தயாராக இருந்தோம்; ராணுவ தளபதி தகவல்
புதுடில்லி: 'ஆபரேஷன் சிந்துார் தாக்குதல் நடத்தியபோது, பாகிஸ்தான் ஏதேனும் தவறான செயலில் ஈடுபட்டால், தரைப்படை மூலம் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தோம்' என்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானிலும், அந்நாடு ஆக்கிரமித்துள்ள காஷ்மீரிலும் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் குண்டு மழை பொழிந்தது. ஏவுகணைகள் சரமாரியாக தாக்கி, பயங்கரவாதிகளை அழித்தன. தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் ராணுவம், தனது டிஜிஎம்ஓ மூலம் போர் நிறுத்தம் செய்யக்கோரியதை ஏற்று போர் நிறுத்தப்பட்டது.
தாக்குதல் நடந்த 88 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் திவேதி கூறியதாவது:
ஆபரேஷன் சிந்துார் தாக்குதலின்போது, பாகிஸ்தான் ஏதேனும் தவறான தாக்குதலில் ஈடுபட்டால் அதை எதிர்கொள்வதற்காக தயாராக இருந்தோம். தரைப்படை தாக்குதலை தொடங்கும் அளவுக்கு இந்திய ராணுவம், முழு அளவில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
எங்களுக்கு கிடைத்த தகவல்படி, பாகிஸ்தானில் இப்போதும் 8 இடங்களில் பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன. சர்வதேச எல்லையில் 2 முகாம்களும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு மறுபுறத்தில் 6 முகாம்களும் இருக்கின்றன.
அவற்றின் செயல்பாடுகளை நாங்கள் முழுமையாக கண்காணித்து வருகிறோம். உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை கட்டாயம் எடுப்போம். ஆபரேஷன் சிந்துார் தொடங்கிய நாட்கள் முதலே, எங்கள் கண்காணிப்பு முழுமையானதாக இருக்கிறது. அது தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு உபேந்திர திவேதி தெரிவித்தார்.
வாசகர் கருத்து (6)
Alphonse Mariaa - Coimbatore,இந்தியா
13 ஜன,2026 - 16:48 Report Abuse
குண்டை போட்டு 8 முகாம்களையும் அழிக்கவேண்டும்
. டிரம்ப் உள்ளே வர முடியாது.. 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
13 ஜன,2026 - 16:12 Report Abuse
நல்லவேளை .... இதை ஏன் இப்போது சொல்கிறார் என்று அறிவுக்குறைபாடு உள்ளவர்கள் புறப்பட்டு வரவில்லை ... இது ராணுவத்தின் ஸ்டராடெஜி .... எதை எப்போது சொல்லவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும் .... 0
0
Reply
ponssasi - chennai,இந்தியா
13 ஜன,2026 - 14:23 Report Abuse
முஸ்லீம் நாடுகளை தவிர்த்து மற்றவை ஒன்றிணையவேண்டும். இவர்களால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் ஒரு அமைப்பை உருவாக்கி அவர்களை கண்காணித்து கட்டுக்குள் வைக்கவேண்டும். 0
0
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
13 ஜன,2026 - 16:10Report Abuse
முற்போக்கு என்கிற பெயரில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்க்கும் குணம் இன்னமும் சில நாடுகளில் உள்ளது ..... அந்த அவலம் போனால் நீங்கள் கூறிய சூழ்நிலை ஏற்படும் .... 0
0
Reply
Nandakumar Naidu. - ,
13 ஜன,2026 - 14:02 Report Abuse
ஆபரேஷன் சித்தூர் தேவையில்லாத ஒன்று, பாகிஸ்தானை அழிக்க ஆபரேஷன் தந்தூர் தேவை . 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
13 ஜன,2026 - 13:40 Report Abuse
இப்பவும் தாக்குதலுக்கு தயாராக இருக்கவேண்டும். எப்பொழுதும் இருக்கவேண்டும். சிறிது அசந்தாலும், பாக்கிஸ்தான் தன்னுடைய வேலையை காட்டிவிடுவார்கள். 0
0
Reply
மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்
Advertisement
Advertisement