காலிறுதியில் அன்கிதா ஜோடி

நந்தபுரி: தாய்லாந்தில் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் தாய்லாந்தில் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, தைவானின் யு யுன்-லி ஜோடி, ஜெர்மனியின் நாஸ்டஸ்ஜா, இத்தாலியின் லிசா ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை அன்கிதா ஜோடி 4-6 என இழந்தது.
இரண்டாவது செட்டை 6-2 என அன்கிதா ஜோடி கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்க நடந்த 'சூப்பர் டை பிரேக்கரில்' அன்கிதா ஜோடி 10-2 என அசத்தியது. ஒரு மணி நேரம், 22 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அன்கிதா ஜோடி 4-6, 6-2, 10-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ருடுஜா போசாலே, சீனாவின் உஷுவாங் ஜெங் ஜோடி, ஹாங்காங்கின் கோடி வாங், தைவானின் யா-ஹிசின் லீ ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம், 30 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ருடுஜா ஜோடி 6-4, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சஹாஜா, 3-6, 2-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் காத்ரினா ஸ்காட்டிடம் தோல்வியடைந்தார்.

Advertisement