நாளை முதல் பொங்கல் விழா மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

கரூர்: பொங்கல் திருவிழாவையொட்டி, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டில் நேற்று, பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.


தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல், இன்று போகி பண்டிகையுடன் துவங்குகிறது. நாளை நடக்கவுள்ள சூரிய பொங்கல், நாளை மறுநாள் நடக்கவுள்ள மாட்டு பொங்கல், 17ல் நடக்கவுள்ள காணும் பொங்கல் திருவிழாக்களுக்கு பொதுமக்கள் காய்கள், பழங்கள், மஞ்சள் கொத்து, கரும்பு, தேங்காய் உள்-ளிட்ட பொருட்களை, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டில் வாங்கி சென்றனர்.

தேங்காய் ஒரு கிலோ, 55 முதல், 65 ரூபாய் வரையிலும், மஞ்சள் கொத்து ஒரு ஜோடி, 30 முதல், 50 ரூபாய், வாழைப்-பழம் ரகத்தை பொறுத்து ஒரு சீப், 40 முதல், 60, தக்காளி ஒரு கிலோ, 35, வெண்டைக்காய், 45.
புடலை, 30, கேரட், 70, பீர்க்கங்காய், 60, கத்தரிக்காய், 25, அவரைக்காய், 50, பாகற்காய், 50, முள்ளங்கி, 15, பீன்ஸ், 50, முட்டைகோஸ், 40, செங்கரும்பு ஒரு ஜோடி, 100, முருங்-கைக்காய், 160, பச்சை மிளகாய், 50, உருளை கிழங்கு, 50, கருணை கிழங்கு, 60, சின்ன வெங்காயம், 50, பெரிய வெங்-காயம், 40, கொத்தவரங்காய், 40, சர்க்கரைவள்ளி கிழங்கு, 50 ரூபாய்க்கு விற்றது.
கரூர் ஜவஹர் பஜாரில், வீட்டு வாசலில் கோலமிட பயன்படும் கலர் பொடிகளை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஒரு பாக்கெட், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. போகி பண்டிகையையொட்டி, வீட்டு வாசலில் வைக்கப்படும் ஆவாரம் பூ, குலப்பூ, தும்பை பூ, வேப்பிலை ஆகியவை உள்ள ஒரு கட்டு, 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்
பட்டது.
கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் செயல்படும், வாழை மார்க்கெட்டில் பூவன் தார், 800 ரூபாய், ரஸ்தாளி மற்றும் கற்பூர வள்ளி தார், 450 ரூபாய், மொந்தன் தார், 350 ரூபாய், செவ்-வாழை தார், 700 ரூபாய், பச்சை நாடன், 400 ரூபாய்க்கு விற்ப-னையானது.

Advertisement