வேலூர் சிஎம்சி மருத்துவமனை விடுதியில் அமலாக்கத்துறையினர் ரெய்டு
வேலூர்: வேலூரில் பிரபலமான சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்களின் விடுதியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த பீஜியன் என்பவருக்கு சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதலிலும் குளறுபடிகள் நடந்ததாக புகார் வந்தது.
இதையடுத்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பணப் பரிவர்த்தனை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினருடன் இந்த சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கல்லூரியில் விடியல் சமூக நீதி இட ஒதுக்கிடு கிடையாது ...இதை விடியல் கேள்வி கேட்குமா ??......மக்கள் வரிப்பணம் ....ஆனால் சிறுபான்மை பெயரில் நடத்தினால் விடியல் சமூக நீதி காற்றில் பறந்து போகுமா ??... ..இவனுங்க அப்பன் வீட்டு பணத்திலா காலேஜ் நடத்தறானுங்க?? ...
கேரளாவை சேர்ந்தவர் சட்ட விரோத பண பரிமாற்றம் ...இந்த மருத்துவமனை மொத்தமும் கேரளா மலையாளிகள் ....தமிழ் நாட்டில் இருந்துகொண்டு தமிழன் வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டு கேரளாக்காரனுக்கு வேலை கொடுப்பானுங்க .....இந்த கல்லூரியில் விடியல் சமூக நீதி இட ஒதுக்கிடும் கிடையாது ....இவனுங்க அப்பன் வீட்டு பணத்திலா காலேஜ் நடத்தறானுங்க?? ...
Loyola college, Chennai too deserves a similar inspection.
Yes yes yes.மேலும்
-
தென் கொரியா முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்