வங்கதேசத்தில் தொடரும் அதிர்ச்சி; 7 மாதத்தில் சிறுபான்மையினர் 116 பேர் கொலை
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த 7 மாதத்தில் சிறுபான்மையினர் 116 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சி நடந்து வருகிறது. இவரது ஆட்சி காலத்தில் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் அடங்கிய சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, மாணவர் அமைப்பின் தலைவரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக்கொல்லப்பட்ட பின், ஹிந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. அவர்களின் வீடுகள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் ஆட்டோ ஓட்டுநரான சமீர் தாஸ்,28, என்ற ஹிந்து இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் கடந்த 7 மாதத்தில் சிறுபான்மையினர் 116 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வங்கதேச சிறுபான்மையினருக்கான மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பகுதியினர் ஹிந்துக்கள்.
அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்; வங்கதேசம் முழுதும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி முதல் 2026ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி வரையில் 7 மாதத்தில் மட்டும் 116 சிறுபான்மையினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 45 மாவட்டங்களில் இந்த வன்முறை பரவியுள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான அசம்பாவீதங்கள், 1946ம் ஆண் தொடங்கி, 1950, 1964,1971 என தற்போது நீடிக்கிறது. 1946ல் 30 சதவீதமாக இருந்த சிறுபான்மையினரின் மக்கள் தொகை, 2020ல் 9 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
வன்முறை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குவதால், குற்றவாளிகள் தப்பிக்கும் நிலை உருவாகிறது. இதுவே சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தற்செயலான குற்றங்கள் அல்ல. இவை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒடுக்குவதற்கான வன்முறை, என்று மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது
ஹிந்துக்களை, பௌத்தர்களை, ஜைன்கள், சீக்கியர்கள், ஆகியவர்களை பாதுகாக்க உலக அளவில் அவர்களுக்காக குரல் கொடுக்க உலக அளவின் ஒரு தர்ம அமைப்பு இல்லை. முஸ்லிம்களுக்கு OIC என்கிற அமைப்பும், கிறிஸ்துவர்களுக்கு வடிகனும், அமெரிக்காவும், ஐரோப்பாவும் உள்ளது.
இந்த அமைப்பை முன்னெடுக்க இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், தென் கொரியா, லாவோஸ், தனிப்பட்ட நிலையில் சீனர்கள், நேபால், பூடான், மொரீஷயஸ், பிஜி போன்ற 20 கும் மேற்பட்ட நாடுகள் சேரும். இது ஒரு மிக பெரிய வியாபார கேந்திரமாகவும் மற்ற வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசு இந்த பிரச்சனையில் தூங்குவது விட்டு விட்டு இந்த அமைப்பை நிறுவ உடனே முயற்சி எடுக்க வேண்டும்.
Save Syria, I am sorry Pakistan என கூவிய சமூக விரோத கும்பல்களும். நடுநிலை, செக்யூலர், மதசார்பின்மை, எம்மதமும் சம்மதம் என் கூவும் முட்டாள்களும் வங்கதேச இந்துக்கள் படுகொலைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை? இதை சூடு சொரனை இல்லாத இந்துக்கள் தான் சிந்திக்க வேண்டும் காரணம் மொத்தமாக விழும் கிருஸ்தவ இஸ்லாமிய ஓட்டு தான் காரணம். இந்து ஓட்டு வங்கி இருந்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும். திருந்த வேண்டியது இந்துக்கள் தான்.
ஹமாஸ் முஸ்லிம்களுக்காக இங்கே நாலு அழுததே , அதுங்க எங்கே .
இங்கு பிஜேபி அரசு என்ன செய்து கொண்டு உள்ளது. என் வங்க தேசம் மேல் கை வைக்க ராணுவ நடவடிக்கை யோசிக்கிறது என்று தெரியவில்லை. அப்பாவி இந்து மக்களை கொன்று குவிக்கிறாரகள். நமது அரசு கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது.
ஒரு வாதத்துக்காக..... இந்தியாவில் இதே நிலை சிறுபான்மையினருக்கு ஏற்பட்டால் இஸ்லாமிய, கிறித்தவ நாடுகள் எப்படி எதிர்வினை ஆற்றும் >>>>
The United Nations எனும் அமைப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது? இனியும் அந்த அமைப்பு தேவையா?மேலும்
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்
-
ஆரோக்கியமான இந்தியாவால் தான் வல்லரசு உருவாகும்! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்