பணி நிரந்தரம் கோரி விஷம் குடித்த பகுதிநேர ஆசிரியர் மரணம்; சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்
சென்னை; சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு தற்கொலைக்கு முயன்ற பகுதி நேர ஆசிரியர் கண்ணன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரசு பள்ளிகளில் கடந்த 2012ம் ஆண்டில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 16 ஆயிரத்து 549 பேர் ரூ.5000 தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். 15 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
தற்போது மாத ஊதியமாக ரூ.12,500 வழங்கப்பட்டு வந்த போதிலும், பணி நிரந்தரம் என்பதை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியரான கண்ணன் என்பவரும் போராட்ட களத்தில் இருந்து வந்தார்.
போராட்டத்தின் போது அனைவரையும் போலீசார் கைது செய்த போது இவரும் கைதாகி வானகரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார். அப்போது பகுதிநேர ஆசிரியர் கண்ணன், வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர், மீட்கப்பட்ட அவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந் நிலையில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த கண்ணன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இனிமே மக்கள் தான் முடிவு செய்யவேண்டும் தமிழகத்தில் தாமரை மலரவேண்டுமா வேண்டாமா நம்முடைய நாட்டில் அடிப்படையையாக அரசு கவனம் செலுத்த வேண்டியது முதலில் விவசாயம் இரண்டாவது ஆசிரியர்கள் மூன்றாவது பாதுகாப்பு துறை ....இதில் இந்த திராவிட மாடல் கவனம் செலுத்தவில்லை என்றால் அந்த ஹேர் மாடல் நமக்கு தேவை இல்லை ..Jaihind
இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகுது
எல்லா புகழும் தீயமூகவிற்கு மட்டுமல்ல அது ஆட்சிக்கு வர உதவியர்களுக்கு மற்றும் அது வெற்றி பெற
ஓட்டை பிரித்தவர்களுக்கும் சேரும் நீங்க மட்டும் குடும்பத்தோட நல்லாருங்க ......
ஆழ்ந்த இரங்கல். அரசை எதிர்த்து போராடுவதை விட சாவதே மேல் என்று நினைத்துவிட்டார். பணி நிரந்தரமின்றி அரசு கல்லூரிகளிலும் குறைந்த வருவாயில் உள்ளார்கள். அனைவருக்கும் தகுந்த சம்பளத்தை கொடுப்பது அரசின் கடமை. பணி நிரந்தரம் செய்ய தேவை இல்லை.
unarchiu வசப்பட்டு இந்த மாதிரி ஒரு செயலைச் செய்வதற்கு முன் தன்னை நம்பியே இருக்கும் குடும்பத்தினரைப் சிறிது நினைத்திருந்தால் இப்போது உயிருடன் இருந்திருப்பார். தற்கொலை செய்து கொள்வதும் தற்கொலை முயற்சியின் வழியாக அச்சுறுத்தல் விடுப்பதும் எப்போதும் பலனளிப்பதில்லை என்பது ஒரு ஆசிரியருக்கு தெரியாதா!
தொகுப்பூதியத்தில் பணியமர்த்திய அதிமுகாவே இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.அவர்கள் தவறுக்கு அவர்கள் தான் பொறுப்பு என்று மக்கள் கூறுகின்றனர்.
திமுக ஆட்சியில் திருப்பரங்குன்ற தீபத்தூணில் விளக்கு ஏற்ற தற்கொலை செய்துகொண்டார் ஒரு வாலிபர். அப்பவும் திமுக அரசு திருந்தவில்லை. இப்பொழுதும் ஒரு பகுதிநேர ஆசிரியர் பணிநிரந்தரம் கோரி விஷம் குடித்து மரணித்திருக்கிறார். இப்பவும் இந்த கேடுகெட்ட திமுக அரசு திருந்தாது. எப்பவும் திருந்தாது. மக்கள்தான் மனம் திருந்தி, வரும் தேர்தலில் திமுகவை ஒழித்துக்கட்டவேண்டும்.
காவல்துறையினர் சம்பாதிக்க, revenue துறையினர் சம்பாதிக்க, மருத்துவத்துறையினர் சம்பாதிக்க வழி சொல்லும் அரசு ஏன் கல்வித்துறையின் ஒரு பகுதியான ஆசிரியத்துறையினர் சம்பாதிக்க ஒரு வழி சொல்லக்கூடாது.
தற்கொலை என்பது தீர்வாகாது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டும். தனது குடும்பத்தை நினைத்து பாருங்கள்.
இந்த அரசாங்கம் எத்தனை பேரை காவு வாங்க போகுது?மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்