மனைவியே ஆனாலும் சம்மதமின்றி தொடக்கூடாது: குஜராத் ஐகோர்ட் குடும்பநல வழக்கில் கோர்ட் கருத்து
ஆமதாபாத்: 'திருமணமான தம்பதிக்கு இடையிலான பாலியல் உறவு, பரஸ்பர சம்மதத்துடனும், மரியாதையுடனும் இருக்க வேண்டும்' என, தெரிவித்துள்ள குஜராத் உயர் நீதிமன்றம், பாலியல் பலாத்கார வழக்கில் முன்ஜாமின் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது.
குஜராத்தைச் சேர்ந்த ஒருவர், முதல் மனைவியுடன் விவாகரத்தான பின், மற்றொரு இளம்பெண்ணை 2022ல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
திருமண உறவில் நுழைந்தது முதலேயே, கணவர் வீட்டில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு கொடுமைகளை அந்த பெண் அனுபவித்தார். இது, குறித்து கடந்தாண்டு அந்த பெண் போலீசில் புகாரளித்தார்.
அதில், 'என் கணவர் மற்றும் குடும்பத்தார், வரதட்சணை கேட்டு துன்புறுத்துகின்றனர். என் கணவர், இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ள வற்புறுத்துகிறார்.
'இதனால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். கணவர் மற்றும் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு குஜராத் விசாரணை நீதிமன்றத்தில் கடந்தாண்டு நடந்தது. இந்த வழக்கில், ஜாமின் வழங்கக் கோரி கணவர் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து முன்ஜாமின் கோரி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திவ்யேஷ் ஏ ஜோஷி பிறப்பித்த உத்தரவு :
திருமணம் செய்து கொண்டால், மனைவியின் விருப்பமின்றி பாலியல் உறவு கொள்ளலாம் என்ற நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது.
ஆனால், நவீன சட்டக் கட்டமைப்புகள் ஒரு திருமண உறவுக்குள்ளும், தனி நபரின் உடல் சுதந்திரம் உண்டு என்பதை அங்கீகரிக்கின்றன.
தம்பதிக்கு இடையிலான நெருக்கம் மற்றும் பாலியல் உறவு இயல்பானதுதான். அது, பரஸ்பர சம்மதத்துடனும், மரியாதையுடனும் இருக்க வேண்டும்.
மனைவியின் விருப்பத்துக்கு மாறாக கணவர், இயற்கைக்கு மாறாக பாலியல் உறவில் ஈடுபடுவது, பெரும் உடல் வலியை ஏற்படுத்துவதுடன், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் அதிர்ச்சியை தருகிறது.
மனுதாரரின் முதல் மனைவியும், இதே போன்ற குற்றச்சாட்டுகளை ஏற்கனவே முன்வைத்துள்ளதை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
எனவே, மனுதாரர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவர் மேற்கொண்ட குற்றங்கள் கடுமையானது என்பதால், கைது செய்து விசாரிக்கவும் போலீசாருக்கு நீதிமன்றம் பரிந்துரைக்கிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பணமும் குடுக்காதீங்க
லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இவர்களுக்காக காத்துக் கொண்டுகிருக்கிறது. அதையெல்லாம் விட்டு விட்டு தேவையில்லாத இந்துக்களின் கோவில், குடும்ப விஷயங்களில் தலையிடுகிறார்கள்.
அவரை சாதா வக்கீல் என்று நினைக்காதே அவர் ஓர் கிரிமினல் லாயர்....
எல்லோரும் ஒருமுறையாவது நேரம் கிடைத்தால் குடும்ப நல கோர்ட்டுக்கு போயி பார்த்துவிட்டு வாங்க அப்போது தான் தெரியும் கணவன் மனைவிக்குள் அப்படி என்ன தான் நடக்கிறது என்று, வாழ பணம் தேவை அவை தேவைப்படும் போது எல்லாம் தரவேண்டும் இல்லை என்றால் கண்ணம்மா நீ கம்முனுகட.... வலுவான காரணம் எல்லாம் வக்கீல் சொல்லி தருவார்கள் அதை அப்படியே கோர்ட்ல் சொன்னால் விவாக ரத்து உறுதி.. காசை கொடுத்தா தான் பொண்டாட்டியே கதவை திறக்கிறாள்....
இருவரும் மனதால் இணைந்து.. பின் உடல் இணைந்தால் இருவருக்கும் மகிழ்ச்சி..
இங்கே கருத்து எழுதியிருக்கும் நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம் . அந்த ஆண் செய்தது என்ன என்பதனை உணர்ந்து கருத்து எழுதுங்க . அவன் ஆண்மகனாய் இருப்பதற்க்கே தகுதி இல்லாத மிருகமாய் இருக்கும்போது கோர்ட் கூறியதை வரவேற்க கற்றுக்கொள்ளுங்க
படுக்கை அறைக்கு செல்லுமுன் அரசியலமைப்பு சட்டத்தை சாட்சியாக வைத்து சம்மதம் வாங்கி அதன் பின்தான் தூங்கப்போக வேண்டும். இல்லை என்றால் சட்டச்சிக்கலில் மாட்டவேண்டிவரும் போல...
வெளங்கிரும்.மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்