மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
சென்னை: ''நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதுபோல், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, வரும் காலங்களில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்,'' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
சென்னை ஐ.ஐ.டி.,யில், நேற்று பொங்கல் விழா நடந்தது.
இதில், தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:
பொங்கல் விழா, பல மாநிலங்களில், பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. தென் மாநிலங்களில், பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து நிறைய படித்துள்ளேன். எனக்கு விருப்பமான உணவு பொங்கல்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஏ.ஐ., தொழில்நுட்பம்
பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியா தலைமைத்துவ நிலைக்கு வளர்ந்துள்ளது. அனைத்து துறைகளிலும், டிஜிட்டல் பரிவர்த்தனை உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை, கல்வி, மருத்துவம், விவசாயம், போக்குவரத்து, உற்பத்தி என, அனைத்து துறையிலும் செயல்படுத்தி வருகிறோம்.
சென்னை ஐ.ஐ.டி., பொறுப்பில், ஏ.ஐ., தொழில்நுட்பம் கல்வித்துறையில் செயல்படுத்தப்படுகிறது. இதில், மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் போதிப்பது, ஆராய்ச்சி மாணவர்கள் சமர்ப்பிக்கும் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்துவது; பள்ளி முதல் ஆராய்ச்சி வரை அவரவர் தாய் மொழியில் கற்க நடவடிக்கை எடுப்பது என, கல்வித்துறையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.
அதி முக்கியத்துவம்
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதுபோல், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, வரும் காலங்களில் கல்வித்துறைக்கு அதிமுக்கியத்துவம் தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஐ.ஐ.டி., பேராசிரி யர்கள் மற்றும் ஊழியர்களுடன் பொங்கலிட்டு வழிபட்டார்.
விழாவில், ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, மத்திய உயர் கல்வித்துறை செயலர் வினீத் ஜோஷி, ஐ.ஐ.டி., பதிவாளர் ஜேன் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2014 ல இருந்து ஒரே பல்லவி ....ஆனா செயல் ல ஒன்னயும் காணோம் ....
தமிழகத்தில் மாநில அரசு பாடதிட்டதில் படிக்கும் மாணவர்கள் தான் பாவம் இந்த திராவிட கும்பல்களிடம் மாட்டிக் கொண்டு திண்டாடுகின்றனர் இதற்கு ஏதாவது வழி செய்யுங்க திரு. தர்மேந்திர பிரதான் அவர்களே.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த பாஞ்சி லட்சத்தை போட முடியுமா?
இதுக்கே பணத்தை செலவழச்சிட்டா 3.5 லட்சம் கோடி செலவு பண்ணி 114 ரஃபேல் விமானத்தை எப்படி வாங்கி எப்படி பராமரிப்பு ஒப்பந்தத்தை காட்டி நல்ல கமிசன் அடிப்பாங்களாம்? எதுக்கும் பாபா ராம்தேவ் கார்ப்பரேட் குரு கிட்டே சொல்லுங்க. ஏற்பாடு பண்ணி விடுவார்.
ஆசிரியர்களை ஆண்டு தோறும் விடுமுறைக்கு பதிலாக பயிற்சிக்கு அனுப்பி தேர்வு மூலம் அவர்களின் தரம் உறுதி செய்யப்பட வேண்டும். பயிற்றுவிக்கும் முறைகளிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும்.மேலும்
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்
-
ஆரோக்கியமான இந்தியாவால் தான் வல்லரசு உருவாகும்! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்