ந.வைரவன்பட்டியில் சுற்றுலா பொங்கல் விழா
திருப்புத்துார்: ந.வைரவன்பட்டியில் சுற்றுலாத்துறை மற்றும் கிராமத்தினர் இணைந்து நடத்திய பொங்கல் விழாவில் வெளிநாட்டினர் பங்கேற்றனர்.
கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார். அமெரிக்கா,ஆஸ்திரேலியா,இஸ்ரேல்,லண்டன்,பெல்ஜியம்,பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டினர்,வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர்.விருந்தினர்களை கிராமத்தார்கள் வரவேற்றனர். நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, வீர விளையாட்டு, பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தன.
தொடர்ந்து கிராமத்தினருடன் பொங்கல் வைத்து வெளிநாட்டினர் கொண்டாடினர். சுற்றுலா அலுவலர் திருவாசன், பி.டி.ஓ..செழியன், வைரவன்கோவில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்க தலைவர் நாகப்பன் , செயலாளர் ஐயப்பன் (எ) சிதம்பரம், கிராமத்தினர் பங்கேற்றனர். தொடர்ந்து வெளிநாட்டினர் ந.வைரவன்பட்டி செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகத்தையும்,பிள்ளையார்பட்டி விண்டேஜ் கார், கேமரா அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர்.
மேலும்
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் கட்ட நடவடிக்கை; காசா அமைதி வாரியம் அமைத்தார் அதிபர் டிரம்ப்
-
பாலமேடு ஜல்லிக்கட்டு துவங்குவதில் தாமதம்; உதயநிதி வராததால் கோவில் காளைகள் அவிழ்ப்பு
-
மாட்டுப்பொங்கலுக்கு பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் விற்பனை 'ஜோர்'
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல்
-
போச்சம்பள்ளியில் வாகன நெரிசல்
-
'மஞ்சப்பை'யுடன் பானை வடிவில் நின்று மாணவியர் பொங்கல் கொண்டாட்டம்