தேசிய 'கோ கோ': ரயில்வே 'சாம்பியன்'
காசிபேட்: தேசிய 'கோ கோ' தொடரில் ரயில்வே, மகாராஷ்டிரா அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.
தெலுங்கானாவில், சீனியர் தேசிய 'கோ கோ' சாம்பியன்ஷிப் 58வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான பைனலில் மகாராஷ்டிரா, 'நடப்பு சாம்பியன்' ரயில்வே அணிகள் மோதின. இதில் ரயில்வே அணி 26-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்றது.
பெண்களுக்கான பைனலில் 'நடப்பு சாம்பியன்' மகாராஷ்டிரா, ஒடிசா அணிகள் மோதின. இதில் மகாராஷ்டிரா அணி 23-22 என்ற புள்ளி கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
ஆண்கள், பெண்கள் பிரிவில் முறையே மகாராஷ்டிரா, ஒடிசா அணிகள் தொடர்ந்து 2வது முறையாக வெள்ளி வென்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
Advertisement
Advertisement