அண்ணாமலையார் தீர்த்த வாரிக்கு பந்தக்கால் நடப்பட்டது
திருக்கோவிலூர்: மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி திருவிழாவிற்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் வரும் 19ம் தேதி தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது. இதில் திருவண்ணாமலை, அண்ணாமலையார் ஆலயத்தில் இருந்து எழுந்தருளும் உற்சவர் அபிதகுஜாம்பால் சமேத அண்ணாமலையார் தீர்த்தவாரி திருவிழாவில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதற்காக சுவாமி எழுந்தருளும் வகையில் அமைக்கப்படும் பந்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இதற்காக பிரயோகவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் முகூர்த்த கால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தென்பெண்ணை ஆற்றில் விழா மேடை அமைக்கும் பகுதியில் வேத மந்திரங்கள் முழங்க நடப்பட்டது. இதில் விழா குழுவினர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும்
-
தென் கொரியா முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்