யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் டில்லியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆலோசனை நடத்தினார்..
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. கூட்டணி, போட்டியிட வேண்டிய சீட் தொடர்பான விவாதங்கள் ஒவ்வொரு கட்சியிலும் சூடு பிடித்துள்ளது.
ஆளும்கட்சியான திமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகள், கூடுதல் சீட் கேட்க திட்டமிட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி முன்னணி பிரமுகர்கள் சிலர், கூடுதல் சீட் கோரிக்கையுடன், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையையும் முன் வைத்து பேச தொடங்கியுள்ளனர்.
தமிழக காங்கிரசில் ஒரு பிரிவினர் விஜயின் தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றும், இன்னொரு பிரிவினர் திமுகவுடன் கூட்டணியை தொடரலாம் என்றும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து ஒருமித்த கருத்து அல்லது முடிவை எடுக்கும் வகையில் நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிய காங்கிரசின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, புதுடில்லியில் எதிர்க்கட்சி, தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
அனைவரின் கருத்துகளையும் ராகுல் கேட்டறிந்தார். தொகுதி பங்கீடு குறித்து தேசிய தலைமையே முடிவு செய்யும்.
பொது வெளியில் கூட்டணி பற்றி பேசுவது,. ட்வீட் போடுவது,அறிக்கை கொடுப்பது என இவை எல்லாம் வேண்டாம் என்று ராகுல் அறிவுறுத்தி உள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கிறதோ, தமிழக காங்கிரஸ் அதை பின்பற்றும்.
இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்தாலும் திமுக அவர்களின் வெற்றிக்கு பாடு பட மாட்டார்கள். அதே நிலைமைதான் காங்கிரஸுக்கும். யார் காலை யார் வாங்குவார்கள் என்று போகப்போகத் தெரியும்.
திமுக ஒரு சூடு சொரணை உள்ள கட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் அவர்களாகவே முன்வந்து காங்கிரஸ் கட்சியை தங்கள் கூட்டணியில் இருந்து வெளியே எடுத்திருக்கவேண்டும். இத்தனை காலமாக தங்களுடன் கூட்டணியில் இருந்துவிட்டு இப்போது அதற்க்கு ஆலோசனை நடத்துகின்றார்கள் என்றால் தற்போது காங்கிரஸ் தலைமைக்கு திமுக மீது நம்பிக்கை குறைந்தும் விஜய் கட்சியின் மீது புதிய காதல் உருவாகி இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
நோகாம நோம்பி கும்பிட்டு சாகாம சாமிகும்பிடப் பாக்குறார்?
ஒரே எண்ணமுடைய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பார்கள். திமுக கூட்டணியே தொடரும். என்னே, அஞ்சு சீட் அதிகம் மற்றும் இரண்டு ராஜ்ய சபா சீட் - டீல் கிளோஸ். எது எதொட சேரும்னு தெரியும். ஏற்கனவே மஹாராஷ்டிராவில் படு கேவலமான தோல்வி அடைந்தாகி விட்டது. ஆகையால் கொஞ்சமாவது தேறணும்னா திமுகவுடன் கூட்டணிதான் சரியாக இருக்கும்னு முடிவு செய்வாங்க.
வழக்கம் போல் கூட்டணிபற்றிய முடிவை ராகுலிடம் லொடுக்கப்பட்டிருக்கிறது என அறிக்கை வரும். மை டியர் பிரதர் முடிவை தவிர வேற்று அறிவிப்பு வரவே வராது
இப்போது காங்கிரஸ் மிக வேகமாக செயல்படுகின்றது அவர்கள் இந்த முறை யாருடன் கூட்டணி என்பதை
எப்படியும் ஏப்ரல் 30க்கு முன்பு தெரிவித்து விடுவார்கள் .....
கூட்டணி யாருடன் என ஆலோசனை நடத்துமளவுக்கு காங்கிரஸ் கட்சி வலிமையான அரசியல் கட்சியாக இல்லையே ராகுல் காந்தி.
காங்கிரஸிக்கு தான் இந்தியா லெவலில் மரியாதை இல்ல கோரிக்கையை நம்பி சீட்டையும் பெட்டியையும் இழந்து த நா விலும் செல்வாக்கையும் இழந்து விடாதீர்!
யார் காங்கிரஸ் உட்காரும் பல்லக்கை சுமப்பது என்பதுதான் இப்போதைய பிரச்சினை .
தாய்லாந்தில் கூட்டணி....மேலும்
-
தமிழகத்தில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா? காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி
-
ஒராண்டில் 539 தாய்மார்கள் தாய்ப்பால் தானம்: 924 குழந்தைகள் நலம்!
-
வங்கதேசத்தில் மற்றொரு கொடூரம்; கார் ஏற்றி ஹிந்து தொழிலாளி கொலை!
-
யாரும் எந்த முட்டுக்கட்டையும் போடக் கூடாது; கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் திட்டவட்டம்
-
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு உறுதி!
-
81 வயதில் 7வது முறை அதிபராக வெற்றி; உகாண்டாவின் யோசேரி முசவேனியை உற்று பார்க்கும் உலக நாடுகள்