கோயிலில் பொங்கல் விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வழுதுார் அருளொளி விநாயகர் கோயில்பொங்கல் விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.அருளொளி விநாயகருக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
இளைஞர்கள், சிறுவர்களுக்கான ஓட்டப் போட்டிகள், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், மியூசிக் சேர் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அன்னதானம் நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அருளொளி மன்றத்தினர் செய்தனர்.
* முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் கிராமத்தில் பசும்குடில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் காப்பகத்தில் பொங்கல் விழா நடந்தது. அவார்டு டிரஸ்ட் செயலாளர் சின்னமருது தலைமை வகித்தார். வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மாணவிகளுக்கு வயதின் அடிப்படையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும்
-
குடியரசு தின அணிவகுப்பு: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்!
-
யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
-
அன்னுார் வட்டாரத்தில் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
-
உங்களுக்கு செட் ஆகல சார்.. வெயிட் பண்ணுங்க: இலவசங்கள் அறிவித்த இபிஎஸ்சுக்கு டிஆர்பி ராஜா பதில்
-
ஈரானில் தொடரும் வன்முறை; விமானத்தில் டில்லி திரும்பிய இந்தியர்கள்!
-
பொலிவுறு நகரம் இந்தூரில் சுத்தமான குடிநீர் இல்லை; ராகுல் விமர்சனம்