முதியவர் மாயம்

புதுச்சேரி: முதியவர் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்தவர் குமார் (எ) சீனிவாசன், 61; சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.

Advertisement