வலியால் துடித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
ஊட்டி: ஊட்டியில் வலியால் துடித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஊட்டி கிளன்மார்கள் பகுதியில் இருந்து, '108' ஆம்புலன்சுக்கு, 'பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்து கொண்டிருக்கிறார்,' என, நேற்று முன்தினம் இரவு, 11:50 மணிக்கு அழைப்பு வந்துள்ளது.
உடனடியாக, பைலட், மற்றும் மருத்துவ உதவியாளர் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, காவியா ஸ்ரீ என்ற கர்ப்பிணி, பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தததை உறுதி செய்து, ஆம்புலன்சில் ஏற்ற தயாராகினர்.பிரசவ வலி அதிகரித்ததால், வீட்டில் பிரசவம் பார்க்கப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, 2.3 கிலோ எடை கொண்ட பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து, நலமுடன் இருந்த தாயும், சேயும் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பொங்கல் பண்டிகை அன்று வந்த அழைப்புக்கு உடனடியாக சென்று பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
மேலும்
-
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு உறுதி!
-
81 வயதில் 7வது முறை அதிபராக வெற்றி; உகாண்டாவின் யோசேரி முசவேனியை உற்று பார்க்கும் உலக நாடுகள்
-
ஈரானில் பதற்றம் தணியும்; காங் எம்பி சசி தரூர் நம்பிக்கை
-
பாதையை மறைத்த அடர்பனியால் கோரம்; பஞ்சாபில் சாலை தடுப்பில் கார் மோதி 5 பேர் பலி
-
சினிமா வாய்ப்பு குறைந்து போனது; ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய காரணத்தால் சர்ச்சை!
-
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு; 19 காளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு