போதையில் அராஜகம்: மூன்று பேர் சிக்கினர்
திருவள்ளூர்: மது போதையில் ஆபாசமாக பேசி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் மாலை நகர காவல் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, மது போதையில் இருவர், ஆபாசமாக பேசி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
இருவரையும் பிடித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருவள்ளூர் வேம்புலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன், 38 மற்றும் அரக்கோணம் வேடல் பகுதியைச் சேர்ந்த சாய்தின்யா, 28, என தெரியவந்தது. வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
அதேபோல், நேற்று காலை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே மது போதையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய, திருநின்றவூரைச் சேர்ந்த சத்யா, 23, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது; டில்லி செல்லும் முன்பு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
-
பதக்கத்தை தரலாம்; பரிசை தர முடியாது: டிரம்ப் -மச்சாடோ விவகாரத்தில் நோபல் கமிட்டி பதில்
-
தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது; இன்று சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
உலகக்கோப்பை கால்பந்து அணிகளுக்கு அமெரிக்காவில் நுழைய தடையா? அமெரிக்கா வெளியிட்ட புதிய அறிவிப்பு
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
Advertisement
Advertisement