உலகக்கோப்பை கால்பந்து அணிகளுக்கு அமெரிக்காவில் நுழைய தடையா? அமெரிக்கா வெளியிட்ட புதிய அறிவிப்பு
வாஷிங்டன்: குடியேற்ற விசாவுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக, உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், புதிய விளக்கத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கர்களின் செல்வத்தை சுரண்டுவதைத் தடுக்கும் விதமாக, பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், ரஷ்யா உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசாவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கவும், பணிபுரியவும் விரும்புபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இந்தப் பட்டியலில் இடம்பெறாத நாடுகளின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. காரணம், இந்த ஆண்டு பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி, அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடைபெற இருக்கிறது. அமெரிக்கா தடை விதித்துள்ள 75 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 15 நாடுகள் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கின்றன.
பிரேசில், மொராக்கோ, ஹைட்டி, அல்ஜீரியா, கேப் வெர்டே, கொலம்பியா, ஐவரி கோஸ்ட், எகிப்து, கானா, ஈரான், ஜோர்டான், செனகல், துனிசியா, உருகுவே மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாடுகின்றன. எனவே, இந்த நாடுகளின் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் அமெரிக்காவில் நடக்கும் போட்டியைக் காண அனுமதியளிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; இந்தத் தடை குடியேற்ற விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். சுற்றுலாப் பயணிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மற்றும் ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கு பொருந்தாது. எனவே உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல்களுக்கெல்லாம் எந்த நாடும் அடிபணியாது. அமெரிக்காவின் மாநிலமாக உள்ள அலாஸ்காவின் மிக நெருக்கத்தில் உள்ள அண்டை நாடு ரஷ்யா. அதன்மீது படையெடுப்பு நடத்தி நிலத்தை ஆக்கிரமிக்க டிரம்ப் முயற்சி செய்யவில்லை. காரணம், ரஷ்யா அணு ஆயுதங்களை வைத்துள்ள மிக வலிமையான நாடு. ஆனால் கிரீன்லாந்து என்பது,ராணுவ வலிமையற்ற டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. டென்மார்க் நாடு நேட்டோ என்ற ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் உறுப்பினராக இருப்பதால் மற்ற ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு இல்லாமல் அமெரிக்காவால் கிரீன்லேந்தை கைப்பற்ற முடியாது.
மோடியை அமெரிக்காவில் நுழைய அந்த நாடு தடை விதித்தது. ஆனால் அதே அமெரிக்கா இன்று மோடியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. மோடி எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிலை தற்போது அமெரிக்காவிற்கு. ட்ரம்ப் வரி உயர்வு சித்தாந்தம் அறிவிக்காதற்கு முன்பே நமது ராகுல் மோடி அமெரிக்காவிற்கு அடிபணிவார் என்று ஆரூடம் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை. ராகுலுக்கு எப்படி இந்த ட்ரம்பின் வரி உயர்வு விளையாட்டு தெரிந்தது என்று தெரியவில்லை. ஆகவே ராகுலை அழைக்கா விட்டாலும் அமெரிக்கா சென்று தனது வழக்கமான இந்திய எதிர்ப்பு பரப்புரையை அனைத்து நாடுகளுக்கும் வழங்க பின் வாசல் வழியாக செல்லலாம்.
மோடி, அமித் ஷா, அதானி, மற்றும் அஜித் தோவல் ஆகியோர் கால்பந்து போட்டிகளை அமெரிக்கா அதிபருடன் அமர்ந்து காண அன்புடன் அழைக்க படுகிறார்கள்.
ரயிலு வாரிசுகளுக்கு மற்றொரு முதலீடு சான்ஸ் பார்வையாளர் என்றோரு போர்வையில்.
அதானி போனால் அவ்ளோதான், ஆரஞ்சு உடையில் அத்தாணியை பார்க்கலாம், ஊழல் குடச்சாட்டு இன்னும் நீதியின் மேசையில் இருக்கு.
நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரியாத தற்குறியா இருக்கியேமேலும்
-
தேர்தல் அறிக்கை முதல் பட்டியல்! அ.தி.மு.க., பழனிசாமி வெளியிட்டார் 5 அறிவிப்புகள்
-
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு... அரசு வேலை! முதல்வர் அறிவிப்பு
-
இந்துாரில் வெல்லுமா இந்தியா: நியூசிலாந்துடன் மூன்றாவது மோதல்
-
இளம் இந்தியா மீண்டும் வெற்றி: வங்கதேச அணி ஏமாற்றம்
-
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாதிப்பாரா ஜானிக் சின்னர்
-
சின்னசாமி மைதானத்துக்கு அனுமதி