உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது; டில்லி செல்லும் முன்பு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
சென்னை: தமிழக தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைமையை சந்திக்க டில்லி புறப்படும் முன்பு, 'நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்,' என்று வலியுறுத்த இருப்பதாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
இத்தனை ஆண்டுகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும், ஆட்சியில் காங்கிரஸ் பங்கெடுத்தது இல்லை. இது பற்றி குரல் எழுப்பியதும் இல்லை. ஆனால், தமிழக சட்டசபைக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று கூறி, காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வருகிறது. இது திமுக சற்றும் எதிர்பாராத ஒன்றாகும்.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு தர வேண்டும், கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வெளிப்படையாக கருத்து கூறி வருவது, திமுகவினர் மத்தியில் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேசிய தலைமை நிர்வாகிகள் குழு முக்கிய ஆலோசனை நடத்த இருக்கின்றனர். இதற்காக,தமிழக காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் டில்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த சந்திப்பின் போது, தமிழக காங்கிரஸின் முழக்கமான ஆட்சியில் பங்கு மற்றும் தவெகவுடன் கூட்டணி விருப்பம் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
முன்னதாக, டில்லி புறப்படும் முன்பு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில், "இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு டில்லி செல்கிறேன். எனக்காக அல்ல.. என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்கார்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காக .. அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்.. இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல .. நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல.. மதவெறி கும்பல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல. நட்புக்கு தோள் கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வழியா கான்கரஸ்சை மூட்டையை கட்டி தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்கும் வேலை யைமுடிந்த அளவிற்கு செய்யகிறீர்கள். என்ன தையரியத்தில் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள். தாவேக்குடன் கூட்டு பொரியலென்று
He talked as he is with DMK.
இரண்டு கழகங்களும் என்ன கதறினாலும் அடுத்தது கூட்டணி ஆட்சிதான். வேறு வழி இல்லை என்று இரண்டு திருட்டுக்கழகங்களும் புரிந்து கொள்ளும். இல்லாவிடில் ட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடே தான்
சற்று நாகரீகமாக எழுதக்கற்றுக்கொள்ளுங்கள்
என்ன சொல்றீங்க? புரியவில்லை
முதுகு எலும்புள்ள மாணிக்க தாகூர். விருதுநகரில் திமுக டெபாசிட் வாங்காது. காங்கிரஸ் கோட்டை. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்கள் உண்டு. திமுக, அண்ணா திமுக கட்சிக்கு மாநிலம் முழுவதும் ஆதரவு கிடையாது. எல்லோரும் தனித்து நிற்கும் போது கட்சியின் வலிமை தெரியும். செல்லாத பெருந்தகை வைத்து காங்கிரஸ் வளராது.
Tagore, you are doing the right thing.
இவரே திமுக இல்லை என்றால் 2024 தேர்தலில் 10000 வாக்கு மட்டுமே வாங்கி டெபாசிட் இல்லாது தோற்று இருப்பார். இப்பவும் இந்த கூட்டபோட்டி டிவோர்ஸ் செய்துவிட்டு வேறு கூட்டணியில் ரி மரியாஜ் என்கிறாரரே தவிர தனி போட்டி என்று சொல்ல முடியவில்லையே?
போட்டி என்று சொல்ல mudiyavillaiye
காங்கிரஸ்காரர்களுக்கு உரிமை என்பது திமுகவின் முந்தானையை பிடித்துக் கொண்டு பின்னால் சுற்றுவது தான். அதை எப்போதும் விட்டு கொடுக்க கூடாது.
குட்டையை குழப்பி விடுவதில் நல்ல திறமை உள்ளது இவரை பாஜகாவில் சேர்த்து கொள்ளலாம் என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
தி மு க வில் சேரலாம்.
வலியுறுத்தும் வலிமை காங்கிரசுக்கு மிச்சமுள்ளதா?. பிஹார், மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல் முடிவுகளுக்குப் பின் எங்குமே கூட்டணி பேரத்தில் வலிமையான நிலைப்பாடு எடுக்கமுடியுமா?. காங்கிரஸ் காற்றுப் போன பலூன். கொடுத்ததை வாய் பொத்தி வாங்கிச் செல்ல வேண்டியதுதான். ஐயோ பாவம்.
உண்மை தமிழ்நாட்டில இகாங்கிரஸ் க்கு என்ன யோக்கியதை இருக்கு , சுயமா நிற்க முடியாது , பீசப்பி இடம் டெல்லி அரியணை இல்லை என்றால் அவர்களை சீண்ட கூட மாட்டார்கள் உங்களுக்கு அதுவும் இல்லை இந்த பவிசில் உரிமை