திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு உதயசூரியன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சங்கராபுரத்தில் திருவள்ளுவர் தின விழாவை முன்னிட்டு பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், நகர செயலாளர் துரை, பப்லு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினாக பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் லதா சரவணன், லலிதா லட்சுமணன், ஒன்றிய செயலாளர் கதிரவன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், மாவட்ட காங்., துணை தலைவர் இதயத்துல்லா, திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, சாதிக்பாட்ஷா, கமுரூதீன், ஷாகுல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement