குறள் வார விழா போட்டி பரிசளிப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குறள் வார விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறள் வார விழாவையொட்டி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு குறள் வினாடி வினாவிற்கான தகுதி சுற்று நடந்தது. அதில் தேர்வானவர்களுக்கு வினாடி வினா போட்டி நடந்தது. அதேபோல், பொதுமக்களுக்கு குறள் ஒப்புவித்தல், ஓவியப் போட்டி நடந்தது. போட்டியில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் 151 பேரும், பொதுமக்கள் 45 பேரும் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த், வெற்றி பெற்ற அரசு அலுவல ர்கள், பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் கேடயமும், பொதுமக்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் ஓவியபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2வது பரிசு ரூ.3 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது. விழாவில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி தமிழகத்திலும் உறுதி; மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை
-
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
-
எம்ஜிஆர் 109வது பிறந்த நாள்... இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
ஹைதராபாத்தில் தமிழக பள்ளி இசைக்குழுவினருக்கு அநீதி; தமிழக அரசு மவுனம் கூடாது என்கிறார் அண்ணாமலை
-
மகளிருக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவச பஸ்: தேர்தல் வாக்குறுதி அளித்தார் இபிஎஸ்