மாணவர்களுக்கு பரிசளிப்பு

சங்கராபுரம்: தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.

தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெண்பாவை வழிபாடு செய்த மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. அறங்காவலர் செந்தில்குமார் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பரிசுவழங்கினார்.

நிகழ்ச்சியில், சைவ சித்தாந்த சேவை நிர்வாகிகள் ராமதாஸ், நாராயணன், சிவக்குமார், ஓதுவார் அருள், மகாதேவன், சந்திரசேகரன் பங்கேற்றனர்.

Advertisement