ப.பாளையம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் காவிரியாற்று பாலம் வழி-யாக ஏராளமான பக்தர்கள், பல்வேறு மாவட்டங்-களில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்-றனர்.
சேலம், நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்-களில் இருந்து ஏராளமான பக்தர்கள், பள்ளிப்பா-ளையம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். இவர்கள், கடந்த, மூன்று நாட்களாக, பள்ளிப்பாளையம் காவிரி பாலம் வழியாக செல்கின்றனர். நேற்று அதிகாலை, 2:00 மணி முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்-றதால், காவிரி ஆற்றுப்பாலத்தில் பக்தர்கள் கூட்-டமாக காணப்பட்டது.
பள்ளிப்பாளையம் வழியாக செல்லும் பக்தர்கள், மூன்று அல்லது நான்காவது நாளில் பழனி மலைக்கு சென்றடைவர். பாதயாத்-திரை சென்ற பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம், கரும்பு, பிஸ்கட், டீ வழங்-கப்பட்டது.
பழனிக்கு நடைபாதையாக ஏராளமானோர் சென்றதால், பள்ளிப்பாளையம் புதிய பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை, போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.
மேலும்
-
மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி தமிழகத்திலும் உறுதி; மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை
-
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
-
எம்ஜிஆர் 109வது பிறந்த நாள்... இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
ஹைதராபாத்தில் தமிழக பள்ளி இசைக்குழுவினருக்கு அநீதி; தமிழக அரசு மவுனம் கூடாது என்கிறார் அண்ணாமலை
-
மகளிருக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவச பஸ்: தேர்தல் வாக்குறுதி அளித்தார் இபிஎஸ்