விசாரணைக்கு ஆஜராகாத 4 பேர் சுற்றிவளைப்பு
சேலம்: சேலம், சீலநாயக்கன்பட்டி, சக்தி நகரை சேர்ந்-தவர் முத்து, 39. இவர் மீது, 2020ல், அன்னதானப்-பட்டி போலீசாரால், கொலை மிரட்டல் வழக்கு பதிந்து, நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் பிடி-வாரன்ட் பிறப்பித்ததால், 6 ஆண்டாக தலைம-றைவாக இருந்த அவரை, சீலநாயக்கன்பட்டியில் நேற்று போலீசார்
சுற்றிவளைத்தனர்.
அதேபோல் சேலம், மணியனுார், காத்தா-யம்மாள் நகரை சேர்ந்த தனபால், 39. இவர் மீது, 2023ல் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கு, அன்னதானப்பட்டி போலீசில் நிலுவையில் உள்-ளது. அமானி கொண்டலாம்பட்டி, நாட்டாமங்க-லத்தை சேர்ந்தவர் ரித்திக்ராஜ், 23. இவர் மீது கொண்டலாம்பட்டி போலீசார், 2020ல் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். நாமக்கல், திருச்செங்-கோடு, சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வர-மூர்த்தி, 31. இவர் மீது, கொண்டலாம்பட்டி போலீசார், 2018ல் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்தனர். இவர்களும் வழக்கு விசார-ணைக்கு ஆஜராகாததால், நீதிமன்றம் பிடி-வாரன்ட் பிறப்பித்தது. இதனால் நேற்று, அவரவர் வீடுகளில் இருந்த, 3 பேரையும், அந்தந்த எல்லை ஸ்டேஷன் போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
நாட்டை கைப்பற்ற டிரம்ப் தீவிரம்; எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்து மக்கள் போராட்டம்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்