சாலையில் திரியும் மாடுகளால் அச்சம்
பாப்பரம்பாக்கம்: நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்ணுார் பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இரவு நேரங்களில் சாலையிலேயே மாடுகள் ஓய்வெடுப்பதால், வாகனங்களில் செல்வோர் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
பல சமயம் சிறு சிறு விபத்துகளில் சிக்கி, காயம் அடைந்து வருகின்றனர். மேலும், சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், எஸ்.பி., உத்தரவிட்டும், நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, நெடுஞ்சாலையில் உலா வரும் மாடுகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்