அ.தி.மு.க.,வின் 5 தேர்தல் வாக்குறுதிகள்; பின்னணியில் ஜோதிடர்கள் அறிவுரை?
ஜோதிடர்களின் அறிவுரைப்படி, சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., முதல் கட்டமாக 5 வாக்குறுதிகளை, அக்கட்சியில் பொது செயலாளர் பழனிசாமி வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேற்று, திதி மற்றும் சுப ஓரை, பழனிசாமிக்கு சாதகமாக இருந்ததால், ஜோதிடர்கள் அறிவுரைப்படி, ஐந்து தேர்தல் வாக்குறுதியை அவர் அறிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில், 17வது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 17ம் தேதியான நேற்று கரிநாள். கடவுள் நம்பிக்கை இல்லை என கூறும், தி.மு.க., கூட எந்த புதிய அறிவிப்பையும் கரிநாளில் வெளியிடாது. ஆனால், கடவுள் நம்பிக்கை கொண்ட பழனிசாமி, ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.
ஜோதிடர்களின் ஆலோசனை பெற்று தான், இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நேற்று, சிவராத்திரி மற்றும் சதுர்த்தசி திதி நாள். அமாவாசை மற்றும் பவுர்ணமியில் இருந்து வரும் 14வது நாள் சதுர்த்தசி திதி. அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை சுக்கிலபட்ச சதுர்த்தசி என்றும், பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை, 'கிருஷ்ண பட்ச சதுர்த்தசி' என்றும் கூறுவர்.
ஆண்டுதோறும், தீபாவளி பண்டிகை, ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதி நாளில் தான் கொண்டாப்படுகிறது. இது, 'நரக சதுர்த்தசி' என்றும் அழைக்கபடுகிறது. இந்நாளில் தான் பகவான் கிருஷ்ணர், நரகாசுரனை அழித்தார். மேலும், சதுர்த்தசி திதி என்பது காளி தேவிக்கு உகந்த நாள், தடைகளை நீக்கி முன்னேற உதவும் நாள்.
சனிக்கிழமையில் வரும் சதுர்த்தசி திதி, நல்ல பலன்களைத் தரும். இது தவிர, காலை, 9:40 மணிக்கு மேல், பூராடம் நட்சத்திரம் என்பதால், அதில் செய்யும் காரியம் வெற்றியடையும். அதை கணக்கிட்டே, நேற்று காலை 11:30 மணிக்கு மேல், தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார்.
மேலும், காலை, 11:00 முதல், 12:00 மணி வரை புதன் ஓரை; மதியம், 12:00 முதல், 1:00 மணி வரை சந்திரன் ஓரை காலமாகும். சனிக்கிழமைகளில் சனி ஓரை, செவ்வாய் ஓரை போன்ற அசுப ஓரையை தவிர்த்து, குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய ஓரைகளில் முக்கிய பணியை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும்.
இதனால் தான், புதன் மற்றும் சந்திர ஓரை நேரத்தை தேர்வு செய்து, தேர்தல் வாக்குறுதியை, ஜோதிடர்கள் அறிவுரைப்படி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
இவர் எது சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டாங்க,
மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பேசி வருகிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி, தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதே மாதிரியான பகுத்தறிவு கொள்கயில் அதிமுகவைவிட திமுகாவில்தான் அதிகம் என நினைக்கிறேன் . சாகித்ய அகாடமிக்கு பதிலாக செம்மொழி செம்மல் என மாற்றியதைப்போல் சனாதனத்திற்கு பதிலாக பகுத்தறிவாதனம் என பெயர் சூட்டலாம்.
இன்று எல்லாரும் மாநிலங்களிலும் எல்லா கட்சிகளும் இலவச அறிவிப்பகளை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.. எந்த கட்சிகளும் இதில் விதிவிலக்கில்லை. இதுதான் மக்கள் எதிர்பார்க்கிற டிரண்டு.
விளங்கிடும்
அரசு பணத்திலிருந்து இலவசங்களாக தி.மு.க. ஐந்து ஆண்டுகளாக வாரி வழங்கி வருவதை போல் தாங்களும் ஆட்சிக்கு வந்தால் அரசு கஜானாவை காலி செய்யும் இலவசங்களை வழங்குவோம் என (நேரடியாக சொல்லாமல்) பழனிச்சாமி அறிவித்தது அனைவரும் எதிர்பார்த்தது தான். தங்கள் மேல் தான் கடன் சுமை ஏறி வருகிறது என்ற உண்மையை அலட்சியபடுத்தி விட்டு தமிழக மக்களும் இவைகளை அனுபவித்து கொண்டே வருகிறார்கள். புலி வாலை பிடித்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இருப்பதால் இலவசங்கள் இல்லாமல் மக்களை தேர்தலில் வோட்டு போடுமாறு கேட்க முடியாத நிலை வந்து விட்டது. எத்தனை தேர்தல் வந்தாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஓட்டுக்காக ஆட்சிக்காக இது நிறுத்தப்பட முடியாத திட்டமாக மாறி விட்டது. நீதிமன்றங்கள் ஒரு வழிகாட்டும் முறையை அறிவித்து அதை தேர்தல் ஆணையம் மூலமாக நிறை வேற்ற முன்வர வேண்டும்.
பீகாரில் பாஜ கூட்டணி பெண்களுக்கு ரூ10,000 தந்தது தேர்தல் ஆணையத்திடம் சொல்லிட்டு செஞ்சாங்க. அதை அறிவித்த பிறகு தான் தேர்தல் தேதி அறிவிப்பு வந்தது. பணத்தை தேர்தல் அன்று கூட கொடுத்து கொண்டு இருந்தார்கள். அது தான் பாஜக கெத்து.
பீகாரில் கொடுத்த மாதிரி கெத்தாக தமிழ் நாட்டிலும் பெண்களுக்கு ரூபாய் பத்தாயிரம் கொடுக்க சொல்லுங்க உங்க ஜி கிட்ட தேர்தல் ஆணையர் உங்க ஆள் தானே நீங்க ஒரு உத்தரவுப் போட்ட சரி என்று உடனே சொல்லி விடுவார்
ஓரை எல்லாம் உங்களுக்கு நல்லா தான் இருக்கும். இப்பொழுது ₹ 11 லட்சம் கோடி அப்பு கடன். யாரவது கஞ்சா, டாஸ்மாக்கை ஒழிப்போம் என்று வாக்குறுதி கொடுத்து சாதிப்பீர்களா? இலவசம் என்ற பெயரை காட்டி தான் இங்கே வாக்கு சேகரிக்கிறீர்களே தவிர, வேறொன்றும் உறுதி கொடுக்க திராணி கிடையாது. வாக்காளர்களை இலவசம் காட்டியே மூளைச்சலவை செய்துவிட்டீர்கள். வரும் காலங்களில் வருபவன் என்ன இலவசம் கொடுப்பான் என்று மக்களை வாயை பிழக்க வைத்துவிட்டீர்கள். எல்லா அமைச்சர்களும், மா.செ, களும். கோடீஸ்வரர்கள் வாக்களித்த மக்கள்...கேவலமான அரசியல் சாக்கடை தூறுவாரவேண்டும்.
So at last the cat is out of the bag. They all believe in Divine Power, astrology etc.
இவர் எல்லாம் MGR , ஜெயலலிதா பற்றி பேச அருகதை இல்லை, சதுர்த்தி, சனி, சந்திர ஓரைகள் எல்லாம் பலிக்கனும்னா உங்கள் மனசு சுத்தமாக இருக்கணுமே, ஆட்சிக்குவந்தபின் மக்களை லோ, லோ என்று அலையவிடுவிங்க,
கருமம் பிடிச்ச விடியல் அண்ணாவை பற்றி பேச அருகதை இல்லையா?
EPS is better than sudalai in administrative decisions.
EPS far better than stalin in all administrative matters and maintaining law and order