சக்தி சங்கம விழா

அவிநாசி: கோ சேவா சமிதி குடும்ப ப்ரபோதன் மற்றும் திருப்பூர் காயத்ரி பரிவார் இணைந்து பாரம்பரிய முறைப்படி மாட்டுப்பொங்கல் மற்றும் சக்தி சங்கம விழா, அவிநாசி அருகே வஞ்சிபாளையம் - சாமந்தங்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, காயத்ரி பரிவார் டிரஸ்ட் ஸ்ரீ சுனில் வியாஸ் தலைமையில் லோகநாதன் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட கோ சேவா பிரமுக் வெங்கடாசலம் வரவேற்றார்.

நாட்டுப் பசுவின் மகிமைகள் குறித்து அகில பாரத கோ சேவா பயிற்சி பொறுப்பாளர் ராகவன், பாரதிய பார்வையும் பண்புகளும் குறித்து குடும்ப ப்ரபோதன் சம்யோஜக் தஷிண் தமிழ்நாடு ஸ்ரீ கிருஷ்ண முத்துசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். காயத்ரி பரிவார் டிரஸ்ட் ஸ்ரீ நந்துஜி பாண்டியா, ஸ்ரீ மனோகர் சிங் ராஜ் ரோஹித் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட கோ சேவா பிரமுக் சம்பத்குமார் நன்றி கூறினார். விழாவில் அனைவருக்கும் பொங்கல் விருந்து அளிக்கப்பட்டது.

Advertisement