ஞாயிறுகளில் கடற்கரை - தாம்பரம் 'ஏசி' மின் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை: கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில், 'ஏசி' மின்சார ரயில் சேவையில், ஞாயிறுகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றம், இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை:
கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில், 'ஏசி' மின்சார ரயிலின் சேவை நேரம், ஞாயிறுகளில் மட்டும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதன்படி, ஞாயிறுகளில் இரண்டு 'ஏசி' மின்சார ரயில் சேவையின் நேரம் மாற்றப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து, மதியம் 2:25 மணிக்கு புறப்படும் 'ஏசி' மின்சார ரயில், மாலை 3:20 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையில் இருந்து, மாலை 3:52 மணிக்கு புறப்படும் 'ஏசி' மின்சார ரயில், மாலை 4:47 மணிக்கு தாம்பரம் செல்லும். இந்த நேர மாற்றம், இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
-
சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்
Advertisement
Advertisement