குன்றத்து மலையில் சந்தனக்கூடு விழா: தர்காவின் மேல் முறையீடு நிராகரிப்பு
மதுரை : மதுரை, திருப்பரங்குன்றம் மலை, சந்தனக்கூடு உருஸ் திருவிழாவில், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரி, தர்கா நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்தது.
மதுரை, மாணிக்கமூர்த்தி ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா நிர்வாகம் மலையில் கந்துாரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டார்.
ஜன., 2ல் விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 'சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டுமே தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விழாவில், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது' என, இடைக்கால உத்தரவிட்டு, ஜன., 21க்கு ஒத்திவைத்தார்.
தர்கா மேலாண்மை அறங்காவலர் ஓசீர்கான், 'சந்தனக்கூடு விழாவில் அதிகம் பேர் பங்கேற்பர். தனி நீதிபதி, 50 பேர் மட்டுமே பங்கேற்க நிபந்தனை விதித்தார். அது தொடர்பான நிவாரணம் எதையும் மனுதாரர் கோரவில்லை. இச்சூழலில் 50 பேர் மட்டுமே பங்கேற்க விதித்த நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும்' என, மேல்முறையீடு செய்தார்.
இம்மனு நிலைக்கத்தக்கதா, இல்லையா என முடிவு செய்ய, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
நீதிபதிகள், 'மலை உச்சி தீபத்துாணில் தீபமேற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், 'தீபம் ஏற்றும் கோவில் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை மத்திய தொல்லியல் துறை, போலீசாருடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்' என, இந்த அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதை மீறி தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க இயலாது' என்றனர்.
தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'தனி நீதிபதி இடைக்கால உத்தரவு தான் பிறப்பித்துள்ளார். இறுதி விசாரணையின் போது உங்கள் தரப்பு வாதத்தை தனி நீதிபதி முன் வைக்கலாம். இம்மனு ஏற்புடையதல்ல. நிராகரிக்கப்படுகிறது' என்றனர்.
ஹிந்து மத நல்லிணக்கம் ,ஹிந்து மத சகிப்புத்தன்மை ,ஹிந்து மத பண்பாட்டு கூறுகள் - இவற்றை நீரென உறிஞ்சி ,மத வாதம் /மத வெறி /மத துவேசம் ,மாவிருட்சமாக வேரூன்றி விரைவென வளர்கிறது . அதன் கனிகள்,காய்கள் ,பூக்கள் ,கிளைகள் , மதவாத நச்சுடையவை .ஆனால் அதன் அபரித வளர்ச்சிக்கு ஹிந்து விரோத பெரியாரிய திராவிட நீர் ஊற்றப்படுகிறது ,சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் செந்நீர் ஊற்றப்படுகிறது .இதனை உணர முடியா நிலையில் ஹிந்து மதம் .இது தான் நிதர்சனம்
என்ன மனிதர்கள், கீழ்த்தரமான எண்ணங்கள், பைசா போதாதா விஷயத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்றே முனைந்திருக்கும் ஜாதி வெறி ஜென்மங்கள்..மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்