நோபல் பரிசு கிடைக்கவில்லை; அமைதி பற்றி எனக்கென்ன கவலை: அமெரிக்க அதிபர் புது முடிவு
வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காத விரக்தியில், “அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இனி இல்லை,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் உட்பட உலகள வில் எட்டு போர்களை தாம் தடுத்து நிறுத்தி, அமைதியை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் வெளிப்படையாக கூறினார்.
ஆனால், அவரது ஆசையை சுக்கு நுாறாக்குவது போல், கடந்தாண்டுக்கான நோபல் பரிசு, தென் அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது.
கடந்த 3ம் தேதி வெனிசுலாவில் அதிரடியாக நுழைந்த அமெரிக்க ராணுவம், போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியதாக அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோராவை கைது செய்து அமெரிக்க சிறையில் அடைத்தது. இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் இடைக்கால அதிபராக, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றுக் கொண்டார்.
தங்கள் நாட்டு அதிபரை கைது செய்து வெனிசுலாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்ததாகக் கூறி, மச்சாடோ தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் வழங்கினார். இதை, பரஸ்பரம் மரியாதை என டிரம்ப் பாராட்டினார். ஆனால், நோபல் பரிசு குழு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நோபல் பரிசு கை மாற்றப்பட்டாலும், அந்த பட்டம் அறிவிக்கப்பட்டவரின்றி வேறொருவருக்கு மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த அதிபர் டிரம்ப், நோபல் பரிசு வழங்கும், ஐரோப்பிய நாடான நார்வேவின் பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், 'எட்டுக்கும் மேற்பட்ட போர்களை நிறுத்திய பிறகும் உங்கள் நாடு எனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை. எனவே, இனி அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. 'இருப்பினும், என் முதன்மையான முன்னுரிமை என்பது எப்போதும் அமைதிக்கானதாகவே இருக்கும்.
'தற்போது அமெரிக்காவுக்கு எது நல்லது மற்றும் சரியானது என்பது பற்றி சிந்திக்க எனக்கு நேரம் கிடைத்துள்ளது' என, டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கேட்டு பெற்றால் அது நடுநிலை பாணியில் அது யாசகம். அடுத்தவர்களின் உள்ளத்தில் இடம் பிடிக்க வேண்டும்.
நீ ... இருந்தாலே போதும்.
பொங்கல் சமயத்தில் மாடு பிடிக்கும் வீரர்கள் போன்று இப்போது அமெரிக்க அதிபர் நாடு பிடிக்கும் டிரம்பு என்று பெயர் வாங்கிவிட்டார் அதுவே போதுமே இன்னும் எதற்கு நோபல் பரிசு
எது எப்படியோ இப்போ அமெரிக்க மோகம் குறைந்து விட்டது. Green கார்ட் வைத்து இருக்கும் ஒருவர் சொல்கிறார் -நீங்கள் அமெரிக்காவில் செட்டில் ஆவீர்களா என்ற கேள்விக்கு அவர் பதில் ஐய்யோ.. இந்தியாவே சொர்க்கம் என்கிறார். சுமார் 70 ஆண்டுகள் அமெரிக்க தான் உலகை ஆண்டது. அதனால் அமெரிக்கர்கள் பிற நாடுகள் அமெரிக்காவை உறிஞ்சஜூகிறது என்று நினைக்கிறார்கள். அதன் தாக்கமே டிரம்பின் தோற்றம் ..அதோடு வெள்ளையர்களின் நிறவெறி தலை எடுக்கிறது. தென் ஆப்பிரிக்க போய் இப்போ அமெரிக்கவில் அது வருகிறது.
இவர் உண்மையிலேயே நல்ல மன நிலையில்தான் இருக்கிறாரா?
இவரை எந்த ரகத்துல சேக்கறது. இவரு கெட்டது போதாதுன்னு அமெரிக்காவையே கெடுத்துடுவாரு போல இருக்கே. ஆண்டவா.
Trump has to do some self analysis. He and his country is the number one in arms and ammunition development besides world wide marketing. To market unnecessary tensions between countries, he plays many games. One side he will say USA is against terrorism, but he will invite Pak. Army head, a man continuously support pak terrorists for a dinner. He is not sincere in his words. How he will get NP?
தனக்கு அளித்த பட்டத்தை இன்னொருவருக்கு எடுத்து தானம் அளித்த பட்டத்தை முதலில் திரும்பப்பெறவேண்டும். அப்போது தான் இதன் மதிப்பு இருக்கும்.
இவர் அமைதியாக இருந்தால் உலகம் அமைதியாக இருக்கும், படித்திருக்கும் நாய்க்கு கல் எறிந்தால் நாய்கள் எல்லாம் சேர்ந்து குறைக்கத்தானே செய்யும்.
நோ பல்லு பரிசு வேண்டுமாலும் கொடுக்கலாம். யேனென்றால் கண்ட கண்ட இடத்தில் மூக்ககை நுழைக்கும் ஜென்மம்.மேலும்
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு
-
கவர்னர் ஏன் வெளிநடப்பு செய்தார்: லோக் பவன் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
-
மக்கள் நலனில் அக்கறை உள்ளவராக கவர்னர் இருக்கணும்: முதல்வர் ஸ்டாலின்
-
தமிழக சட்டசபை கூட்டத்தொடர்; உரையை வாசிக்காமல் வெளியேறினார் கவர்னர்
-
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு விசாரணை சூடுபிடித்தது; 21 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!
-
பிப்., 7ல் தி.மு.க., இளைஞரணி மாநாடு