கவர்னர் ஏன் வெளிநடப்பு செய்தார்: லோக் பவன் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
சென்னை: கவர்னர் பேசும் போது அவரது மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை என கவர்னர் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறியதாக லோக் பவன் (கவர்னர் மாளிகை) விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து லோக் பவன் வெளியிட்ட அறிக்கை: கவர்னர் பேசும் போது அவரது மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை; உரையில் பல ஆதாரமற்ற கூற்றுகளும், தவறான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மக்களை பாதிக்கும் பல முக்கிய பிரச்னைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன; மாநிலத்திற்கு ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறுவது உண்மைக்கு மாறானது. பல முதலீட்டாளர்களுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகிதத்திலேயே உள்ளன. உண்மையான முதலீடு மிகக் குறைவாகவே உள்ளது.
பெண்களின் பாதுகாப்பு
முதலீட்டு தரவுகள், தமிழக முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்பு குறைந்த மாநிலமாக மாறி வருவதை காட்டுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு நேரடி முதலீடு பெறும் மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தில் இருந்தது; இன்று ஆறாவது இடத்தைப் பிடிக்க போராடி வருகிறது; பெண்களின் பாதுகாப்பு குறித்து உரையில் எந்த குறிப்பிடும் இல்லை.
போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான பாலியல் வன்முறை வழக்குகள் 55% க்கும் மேல் அதிகரித்துள்ளன; பெண்களைத் தொந்தரவு செய்வது 33% க்கும் மேல் உயர்ந்துள்ளது; போதைப் பொருட்கள் பரவலும், பள்ளி மாணவர்கள் உட்பட இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தின் அதிகரிப்பும் மிகக் கடுமையான பிரச்னையாக உள்ளது.
தற்கொலை
ஒரு ஆண்டில் மட்டும் போதைப் பழக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். இதில் பெரும்பாலும் இளைஞர்கள் தான். இது நமது எதிர்காலத்தையே பாதிக்கிறது. ஆனால் இது அலட்சியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது; தலித் மக்களுக்கு எதிரான அத்துமீறல்கள் மற்றும் தலித் பெண்கள்மீது பாலியல் வன்முறைகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
இதுவும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது; மாநிலத்தில் ஒரு ஆண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்துள்ளனர்—ஒரு நாளுக்கு சராசரியாக 65 தற்கொலைகள்.நாட்டில் எங்கும் இத்தகைய மோசமான நிலை இல்லை. தமிழகம் 'இந்தியாவின் தற்கொலை தலைநகர்' என குறிப்பிடப்படுகிறது.
இருந்தும் அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை; உரையில் இது இடம்பெறவில்லை;
கல்வித் தரநிலைகள் தொடர்ந்து சரிவடைந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களில் பரவலான நிர்வாகக் குறைபாடுகள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கின்றன. 50% க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.
தற்காலிக ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கிறார்கள். இதுவும் உரையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது; பல ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் பல ஆண்டுகளாக தேர்தல்கள் நடத்தப்படாததால் அவை செயலிழந்த நிலையில் உள்ளன; அரசு நியமித்த சிறப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மனவேதனை
கோடிக்கணக்கான மக்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளில் இருந்து வஞ்சிக்கப்படுகின்றனர். இது அரசியலமைப்பின் எழுத்துக்கும் ஆவிக்கும் எதிரானது. கிராம பஞ்சாயத்துகள் மீண்டும் செயல்பட மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் உரையில் இது குறித்து ஒரு சொல்லும் இல்லை.
மாநிலத்தில் பல ஆயிரம் கோவில்களில் நிர்வாக வாரியங்கள் அமைக்கப்படாமல், அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. கோடிக்கணக்கான பக்தர்கள் கோவில்களின் தவறான நிர்வாகத்தால் மனவேதனையிலும் அதிருப்தியிலும் உள்ளனர்.
அலட்சியம்
பழமையான கோவில்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்கான மதுரை உயர் நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள் 5 ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் அலட்சியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வெளிப்படும் மற்றும் மறைமுக செலவுகளால் கடும் அழுத்தத்தில் உள்ளன. வேலைவாய்ப்புக்கும் வளர்ச்சிக்கும் இவை மிக முக்கியமானவை. நாட்டில் 5.5 கோடிக்கு மேற்பட்ட MSMEகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சுமார் 40 லட்சம் மட்டுமே உள்ளது.
அவமதிப்பு
மிகுந்த வளர்ச்சி வாய்ப்புகள் இருந்தும், தமிழக தொழில் முனைவோர் பிற மாநிலங்களில் தொழில்களை தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த பிரச்னையும் உரையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கீழ்மட்ட ஊழியர்களிடையே அனைத்து துறைகளிலும் பரவலான அதிருப்தி நிலவுகிறது.
அவர்கள் கலக்கம் மற்றும் ஏமாற்றத்தில் உள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து எந்த குறிப்பிடும் இல்லை; தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது; அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட அடிப்படை கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கவர்னர் நேர்மறையான, நாட்டு நலக்கான தேச பக்தர்.
திருட்டு திமுக காரர்கள் அடிக்கும் கொள்ளைகளை மறைக்க,.... திசை திருப்ப... - மத பிரச்சினைகளை கிளம்புவது, மத்திய அரசின் மீது குறை சொல்லிக் கொண்டே இருப்பது, ரவுடித்தனம் செய்வது எல்லாம் அறிவில்லாத சுயநல மக்களுக்கு புரியாது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது, இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்பது போன்ற பொய் பிரச்சாரங்களை தொடர்ந்து செய்வது, ஓட்டுக்கு காசு கொடுப்பது என்று பல பல தில்லாலங்கடி வேலைகளை செய்வதில் திருட்டு திமுக வினர் கில்லாடிகள்.
சுயநலம் பிடித்த தமிழக மக்களுக்கு இப்போது புரியத் தொடங்கி இருப்பது நல்ல விஷயம். திமுக கோஷ்டியை விரட்டி அடிப்பதே தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும்.
முட்டு கொடுக்கும் மற்றும் கதறும் நேரம் இது....
கரெக்ட் 200 ரூபா உடன் பிறப்பே . ஆளும் குள்ள நரிகளுக்கு எப்போதும் கொண்டாட்டம் தான்.
கவர்னரின் வேலை உரையை வாசிப்பது மட்டுமே அவருக்கும் அந்த உரையில் உள்ள கருத்துக்களுக்கும் சம்பந்தம் இல்லை அரசின் உரை. அரசின் சாதனைகளும், இன்னும் செய்ய வேண்டிய வேலைகளை பற்றியும் குறிப்பிட்டால் இவருக்கு என்ன கஷ்டம் / நஷ்டம்.? மொத்தத்தில் ஒரு நாடகம் நன்றி இதனால் தி மு க அரசுக்கு நல்ல விளம்பரம் காஸ்மீர் வரை தமிழ்நாடு பற்றி பேசப்படுகிறது. அதனால் கவர்னரை மாற்ற வேண்டாம், இங்கு இவர் தான் வேண்டும். வேறு யாரும் புத்திசாலிகள் வந்து விட்டால் இப்படி நடக்குமா ? இலவச விளம்பரம் கிடைக்குமா ? எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி கேட்க முடியாமல் பண்ணினார்.
அநேகமாக இந்தியா பூராவும் இந்த நிலைதான் . மது விற்கும் அரசு, காலாட் சார சீர் அழிவு . இதற்கு எல்லா அரசியல் கட்சிகள், கட்சி சார்ந்த கவர்னர்கள் தாசன் காரணம்
மக்கள் மாற்றதுடன் நல்ல அரசை தேர்ந்துடுப்பர். நம்பிக்கையுடன்..
நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன என்பது போல் இவர் உரை வாசித்தால் என்ன வாசிக்காவிட்டால் தான் என்ன? இவர் வாசிப்பதை கேட்க இங்கு யாரும் காத்திருக்கவில்லை!
அப்பறம் ஏன் வாயிலயும் வயித்துலயும் அடிச்சிக்கிட்டு புலம்பறீங்க??
திராவிட கும்பல்களுக்கு புரியும் பாஷையில் கவர்னர் ரவி அவர்கள் நடந்து கொண்டது பாராட்ட தக்கது. தமிழக மக்கள் வெறுக்கும் ஆட்சி தான் இங்கு உள்ள இன்னும் 2 மாதங்கள் பொருத்து தான் ஆக வேண்டும்.
ஆட்சியை கலைத்து கேடிகளுக்கு லாடம் கட்ட ஏற்பாடு செய்தார் என்றால் கவர்னரின் அதிகாரம் தெரியும். மென்மையான போக்கை கடைபிடித்தால் இப்பதான் ஆட்டம் போடுவார்கள் தீம்க்கா ரவுடிகள்.
ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வாசித்தவுடன் முன்பின் யோசிக்காமால் நீட்டிய இடத்தில் பாயும் மனம் மாறவேண்டும்.மேலும்
-
மத்திய அரசு ஊழியருக்கு எதிரான ஊழல் புகாரை மாநில போலீசார் விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்
-
முஸ்லிம் நாடுகளுடன் சேர்ந்து 'இஸ்லாமிய நேட்டோ' அமைக்க பாகிஸ்தான் முயற்சி
-
ரூ.72 லட்சம் வரி பாக்கி: அதிர்ந்த கூலி தொழிலாளி
-
பிரதமர் மோடி 23ம் தேதி தமிழகம் வருகை; இரண்டே முக்கால் மணி நேரம் ஒதுக்கீடு
-
முக்கிய எட்டு துறைகள் டிசம்பரில் 3.70% வளர்ச்சி
-
மாநில வளர்ச்சிக்கு பெருந்தடையாக உள்ளது மத்திய அரசு: தமிழக சட்டசபையில் குற்றச்சாட்டு