3 வீடு, கார், ஆட்டோவுடன் ஆடம்பரம்; மிரள வைத்த கோடீஸ்வர யாசகர்
இந்துார்: மத்திய பிரதேசத்தின் இந்துாரில், மூன்று வீடுகள், கார், மூன்று ஆட்டோக்கள், வட்டி பணம் என, பல கோடி ரூபாய்க்கு யாசகர் ஒருவர் அதிபராக இருப்பது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 2024 பிப்ரவரி முதல் இந்துாரில், தெருக்களில் திரியும் யாசகர்களை மீட்டு, அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அந்த வகையில், ஒரு யாசகரை மீட்டபோது, அவருக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பது கண்டு, அதிகாரிகள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். அந்த யாசகரின் பெயர் மங்கிலால். தற்போது அல்வாசா என்ற பகுதியில் பெற்றோருடன் அவர் வசித்து வருகிறார்.
யாசகம் மூலம் சம்பாதித்த பணத்தில், இந்துாரின் பகத் சிங் நகர், ஷிவ் நகர் மற்றும் அல்வாசாவில் மூன்று வீடுகளை அவர் வாங்கி இருக்கிறார். அதில் ஒரு வீடு மூன்று அடுக்குமாடிகளை கொண்டது.
இது தவிர, மூன்று ஆட்டோக்களை வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார். 'மாருதி சுசூகி டிசைர்' காருக்கும் மங்கிலால் சொந்தக்காரர். அந்த காரையும் வாடகைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்.
இந்துாரின் சராபஸா பஜாரில், சிறு நகை வியாபாரிகளுக்கும் ரகசியமாக வட்டிக்கு பணம் தருகிறார். தினசரி அல்லது வாரந்தோறும் என்ற ரீதியில், அந்த வட்டி பணத்தை மங்கிலால் வசூலித்து வருகிறார். எனினும், யாசகம் செய்வதை அவர் விடவில்லை.
வங்கிக் கணக்குகள், கையிருப்பு, வட்டி மூலம் கிடைக்கும் பணம், வாடகை ஆட்டோக்கள், கார் மூலம் கிடைக்கும் வருவாய் என, மங்கிலாலின் சொத்து விபரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
ஏற்கனவே மூன்று வீடுகள் வைத்திருக்கும் மங்கிலால், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் வாயிலாகவும், ஒரு வீட்டை கட்டி முடித்திருப்பதும் அதிகாரிகளை வாய் பிளக்க வைத்துள்ளது.
விரைவில், அவரை கலெக்டர் முன்பாக ஆஜர்படுத்தவுள்ளனர். அப்போது அரசு வீடு எப்படி கிடைத்தது என்பது குறித்து, அவரிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வரும் யாசகர்கள் மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தின் கீழ், இந்துாரில் மட்டும், 6,500 யாசகர்கள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 4,500 பேருக்கு மாநில அரசின் திட்டங்கள் மூலம் கண்ணியமாக வாழ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,500 பேர் உஜ்ஜைன் ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒரு செய்திக்கு பல கருத்துக்கள்
தினமலருக்கு பாராட்டுக்கள், எப்படி சமையல் காரரை செஃப் என்று அழைப்போமோ அதுபோல, இவரை "யாசகர்" என்று கௌரவமாக குறிப்பிட்டு புரட்சி எற்படுத்தியுள்ளீர்கள்
இங்கே தமிழ்நாட்டில் நிறையவே உள்ளனர். என்னமோ பாஜக ஆட்சியில் மட்டுமே இருப்பதாக பேசுவது அறிவீலித்தனம்.
பலரும் நேர்மையாகவோ நேர்மையற்றோ பலவிதமான தொழில்கள் செய்து அசையா சொத்துக்கள் வாங்குகின்றனர். சொத்து வாங்கிவிட்டோம் என்று தொழில் செய்வதை நிறுத்திவிடுகிறார்களா என்ன?
ஆனாலும் கட்டுமர திருட்டு திமுகவினர் ஊழல்கள் லஞ்சங்களை நிறுத்தாமல் தொடர்ந்து சொத்து சேர்ப்பதை நீங்கள் இப்படி கலாய்க்கக்கூடாது.
தியாகு அவர்களே, நீங்கள் குறிப்பிடும் கூட்டம் உள்நாட்டு வர்த்தகத்தை மூடிவிட்டு இப்போதெல்லாம் வெளிநாடுகளில்தான் சொத்து வாங்க முனைப்பு காட்டுகிறார்கள்.
நல்லவேளை இவர் மத்திய பிரதேசத்தில் இருக்கிறார், இவர் டுமிழ்நாட்டில் இருந்திருந்தால் கட்டுமர திருட்டு திமுகவினரால் இவரது சொத்துக்கள் ஆட்டையை போடப்பட்டிருக்கும்.
இது போன்ற நடவடிக்கைகள் தேவை.
Recover All his Assets for Rehabilating Beggars only Common Shelter, Food Dress Health, Jobs etc
பாஜக டபுள் எஞ்சின் ஆட்சியில் பிச்சைக்காரனுக்கு யாசகர் என்ற மரியாதை, கோடீஸ்வரன் வாழ்க்கை கிடைக்கும் என்று பெருமை கொள்ளலாம். புல்லரிக்க வைக்கும் வளர்ச்சி. அம்பானி அதானி மட்டும் அல்ல, பிச்சைக்காரனும் பாஜ ஆட்சியில் கோடீஸ்வரன் ஆகலாம். நடுத்தர வர்க்கம் பிச்சைக்காரர்கள் ஆகிறார்கள் என்று புலம்ப வேண்டாம்.
டுமிழர்களை பொறுத்தவரையில் அம்பானி அதானி இவர்களெல்லாம் மோசமான கார்பொரேட்கள். ஆனால் தமிழகத்தின் முதல் பணக்காரர் இந்திய அளவில் நாற்பதாவது பணக்காரர் சன் டிவியின் ஓனர் பெட்டி கடை வைத்து பொறி உருண்டை வியாபாரம் செய்து படி படியாக முன்னேறியவர்.
பணம் சம்பாதிக்க வெட்கம், மானம், ரோசம் இது எதுவுமே பார்க்கக்கூடாது, இதுதான் யாசகரின் கொள்கை,
திருட்டு த்ரவிஷன்களின் ஊழல்மிகு கொள்கையும் அதுவே
திருட்டு திராவிஷம் போல திருடவில்லை, அடுதவணை ஏமாற்றவில்லை பொய்ச்சொல்லவில்லை மாறுவேடம் மட்டுமே
அரசியல் வாதிகளின் கொள்கை ?
பணமாக கொடுத்தால் இப்படித்தான் நடக்கும். உணவாக கொடுப்பதே சரியான பிச்சை.மேலும்
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு
-
கவர்னர் ஏன் வெளிநடப்பு செய்தார்: லோக் பவன் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
-
மக்கள் நலனில் அக்கறை உள்ளவராக கவர்னர் இருக்கணும்: முதல்வர் ஸ்டாலின்
-
தமிழக சட்டசபை கூட்டத்தொடர்; உரையை வாசிக்காமல் வெளியேறினார் கவர்னர்
-
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு விசாரணை சூடுபிடித்தது; 21 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!
-
பிப்., 7ல் தி.மு.க., இளைஞரணி மாநாடு