மத்திய அரசு ஊழியருக்கு எதிரான ஊழல் புகாரை மாநில போலீசார் விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: 'ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகளில் சிக்கும், மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிந்து விசாரணை நடத்த மாநில போலீசாருக்கு அதிகாரம் இருக்கிறது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு பதியும் முன்பாக, சி.பி.ஐ.,யிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை என்றும் தெளிவு படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில், மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அம்மாநில லஞ்ச ஒழிப்புத் துறை அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், 'ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மாநில லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தவோ, வழக்கு பதியவோ முழு அதிகாரம் இருக்கிறது' என தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வரையறை
இம்மனு, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றச்சாட்டுகளை மாநில விசாரணை முகமையோ, மத்திய விசாரணை முகமையோ அல்லது வேறு விசாரணை முகமையோ விசாரிக்கலாம்.
அதற்கு ஊழல் தடுப்புச் சட்டத்தில் உள்ள 17வது பிரிவு வழிவகை செய்கிறது. எனினும், விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, குறிப்பிட்ட உயர் பதவியில் இருக்க வேண்டும் என்ற தகுதி மட்டுமே கூடுதலாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மற்றபடி, ஒரு மத்திய அரசு ஊழியருக்கு எதிராக சுமத்தப்படும் லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கிரிமினல் வழக்கு பதியவோ அல்லது விசாரணை நடத்தவோ மாநில போலீசார், மாநிலத்தின் சிறப்பு விசாரணை முகமைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என, ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17ல் கூறப்படவில்லை.
மத்திய அரசு ஊழியருக்கு எதிரான லஞ்சம், ஊழல் வழக்குகளை சி.பி.ஐ., வசம் இருந்து மாநில போலீசாருக்கும், மாநில போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ., விசாரணைக்கும் ஒப்படைக்கப்பட்டே வருகிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களும், புலனாய்வுக்கு உட்பட்டவை தான்.
சரியானது
எனவே, மாநில போலீசார் அதை தாராளமாக விசாரிக்கலாம். வழக்கு பதியும் முன்பாக சி.பி.ஐ.,யிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை. எனவே, இவ்வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்கிறோம்.
ஒரு மத்திய அரசு ஊழியருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் அதிகாரம், சி.பி.ஐ.,க்கு மட்டுமே இருப்பதாக கூறுவது தவறு என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மத்திய அரசுக்கு அடியாளாக வேலை பார்க்கும் அதிகாரிகளை மாநில அரசு கட்டுக்குள்கொண்டு வர இது பயன் படும். ஒரு தலை பட்சமாக வாலாட்டினால் மாட்டிக்கொள்வார்கள் .
மிகவும் தவறான தீர்வு. மத்திய மாநில நிர்வாக மோதலை உருவாக்கும். மாநில பிரிவினையை உருவாக்கும். இது மாநில அரசியல் சாசனம் இருந்தால் மட்டும் தான் பொருந்தும். மத்திய அரசு என்பது எல்லா மாநிலங்கள் சேர்க்கை. மாநில நிர்வாகம் அப்படி இல்லை. மாநிலம் ஒரு நிர்வாக அமைப்பு. அரசு அல்ல. மத்திய அரசு, பிற மாநில ஊழியர்கள் பணி விவரம் எல்லா மாநிலங்களிலும் இருக்க வேண்டும். நீதிமன்ற வழக்கறிஞர்கள் நிர்வாக பணி விதிகள் புரிந்து வாதிடுவது இல்லை. மத்திய அரசு விசாரணை அமைப்புகளை வழக்குகள் முடக்கி வருகின்றன. மத்திய அரசு தாமதம் செய்யாமல் சீர் செய்ய வேண்டும்.
ஆங்கிலத்தில் ஒரு பழ மொழி உண்டு. What is good for goose is good gander.
மத்திய அரசு ஊழியர்கள் மேல் மாநில அரசு லஞ்ச ஒழிப்பு துறை மத்ய அரசு அனுமதி இல்லாமல் நடவடிக்கை எடுக்கலாம் என்றால், மாநில அரசு இங்கு இருக்கும் நமது கீழமை அரசு ஊழியர்கள் மேல் மத்திய அரசின் லஞ்ச ஒழிப்பு துறைகள் நடவடிக்கை எடுக்க தடை சொல்ல முடியாது. நம் முதல்வர் இந்த நீதி மன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறாரா? மேலும் IAS, IPS போன்ற UPSC மூலம் பணிக்கு வரும் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க விதி முறைகள் இருக்கின்றன.
Silence on interpreting rules does not mean it is accepted. This judgement is going to serious repercussions. Another golden opportunity to Sibbals, Singvis etc to mint crores.
சட்டங்கள் எழுதும்போது அம்பேத்கார் அவர்களுக்கு வருங்காலங்களில் திருடர்களும் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதை எதிர்பார்க்காததே இதற்க்கெல்லாம் காரணம்.உலகில் எங்குமே நடந்திராத அவலங்களையெல்லாம் நாம் பார்க்கின்றோம். ஊழலை விசாரிக்க கூடாது என்பதற்கும் உச்சநீதிமன்றம்வரை அரசே செல்லமுடியும், அது சாதகமாகவே கூட அமையும் என்பதை பார்த்திருக்கின்றோம். மத்திய அரசு லஞ்சம், ஊழல், அரசு திட்டங்களின் ஊழல் இவைகளையெல்லாம் மத்திய குற்றம், மாநில குற்றம் என்று குற்ற அளவுக்கேற்றபடி வகைப்படுத்தி மாநிலமோ அல்லது மத்திய அரசோ ஒருவருக்கொருவர் தடையின்றி விசாரிக்க சட்டம் இயற்ற வேண்டும். தவறாக அதிகாரத்தை பயன்படுத்தினால் கடுமையான தண்டனைக்குட் படுத்தவேண்டும். ஊழலுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடாது.
அதேசமயம் மாநில அரசு ஊழியர்கள் மேல் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை சிபிஐ விசாரிக்க லாமா? அதற்கு சரியான முறையில் தீர்ப்பை சொல்லுவாங்களா
நீதிமன்றம் மம்தாவுக்கு, அப்பாவுக்கும் வைக்கும் பொறி. இதை எளிதாக எடுத்துக்கொண்டு மத்திய அரசு ஊழியர்களையும் கூட விசாரிக்கலாம் என்று சொன்னால் மத்திய அரசு மாநில அரசு ஊழியர்களையும் விசாரிக்கலாம் என்று ஆகிவிடும். சிபிஐக்கு அனுமதி, அமலாக்கத்துறைக்கு அனுமதி என்று ஒருவரும் காத்திருக்க மாட்டார்கள். சுயாட்சி என்று கூட உருட்டமுடியாமல் குறைந்த பட்சம் பத்து மந்திரிகளையாவது இழக்கவேண்டி வரலாம்.
எப்படி எங்க ஆளோட திங்க்கிங் பவர். இவரும் இரும்பு மண்டைக்குள் இரண்டு மூளை வைத்திருக்கும் திங்கிங் திமிங்கிலம். 24 அவர்ஸ் ஹெல்மெட் போட்டே இருப்பார். இல்லைன்னா மூளை வெளியே கொட்டி வீணாயிடும்.
மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருத்தன் 12 லட்சம் லஞ்சம் வாங்கி பிடிபட்டான். அதை திராவிட திமுக அரசு விசாரிக்க துணிந்தால் ஐபிஎஸ் அண்ணாமலை தலைமையில் ராணுவத்தை இறக்குவோம், தளபதி எச் ராஜா அவர்கள் முன்னிலையில் போராட்டம் வெடிக்கும். காடேஸ்வரர் காண்டானால் காடு தாங்காது மட்டும் இல்லை, தமிழ்நாடு தாங்காது.
மத்திய அரசு ஊழியருக்கு எதிராக சிபிஐ மட்டுமே விசாரிக்க முடியும். தவறான தீர்ப்பு. இதை தான் ஸ்டாலின் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.
பாஜ கட்சியின் வெளுக்கும் மெசினை பற்றி உங்களுக்கு தெரிந்த அளவுக்கு திராவிட கும்பலுக்கு தெரியவில்லை. பாஜகவின் செல்லப்பிள்ளை, கைப்பிள்ளை, கைத்தடி தான் சிபிஐ என்ற ரகசியம் அவர்களுக்கு தெரியாது.மேலும்
-
திருச்சியில் மார்ச் 8ல் தி.மு.க., மாநில மாநாடு
-
பா.ஜ., நிர்வாகி மீதான வழக்கு ரத்து
-
'அரசு பஸ்சில் இலவசமாக மனைவியோடும் காதலியோடும் ஆண்கள் ஊர் சுற்றலாம்': அ.தி.மு.க., மாஜி புதுவித விளக்கம்
-
பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துள்ள தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம்
-
தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி; ஆட்சியில் கிடையாது
-
கரூர் சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு அறிவித்த நிவாரணத்தை வழங்காத பா.ஜ.,