கவர்னரை விமர்சனம் செய்வது முறையல்ல; இபிஎஸ்
சென்னை: திமுக அரசு செய்த தவறை, சரி என்று அறிக்கை வாசிக்கை மறுக்கும் கவர்னர் பற்றி விமர்சனம் செய்வது முறையல்ல என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தற்கொலை தலைநகராக தமிழகம் மாறியுள்ளதாக கவர்னர் கூறியுள்ளார். அமைச்சரவை தயாரித்து வழங்கிய உரையில் உள்ள தவறை கவர்னர் சுட்டிக்காட்டுகிறார். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது.
போதைப்பொருள்
கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. எல்லா தொலைக் காட்சியிலும், பத்திரிகையிலும் கொலைகள் குறித்த செய்திகள் தான் வெளியாகுகிறது. அந்த அளவுக்கு மோசமான சூழல் தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது. இன்று தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக உருவாகி விட்டது.
இந்த போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று பலமுறை இந்த அரசை வலியுறுத்தியும், இந்த அரசு செவி சாய்க்காமல் இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்காத காரணத்தினால் இன்றைய தினம் தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி கடும் குற்றச்செயலில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
முதல்வரின் கருத்து
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இருக்கும் ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும் வலியுறுத்தி நாங்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறோம். கவர்னர் வெளியிட்டு இருக்கும் அறிக்கை எல்லாம் உண்மை தான். கவர்னர் உரையில் திமுக அரசு தவறான கருத்தை திணிக்கப் பார்க்கின்றனர். கவர்னர் உரையில் முதல்வரின் கருத்துகளும் உள்ளன.
தமிழகத்தில் நடக்கும் உண்மை செய்திகளை கவர்னர் உரையில் இடம்பெற வையுங்கள். நான் படிக்கும் போது நீங்கள் செய்த தவறை சரி என்று படிக்க மாட்டேன். வாசிக்க மாட்டேன் என்று கவர்னர் ரவி சொல்கிறார். இதுதான் பிரச்னை. கவர்னர் குறித்து விமர்சனம் செய்வது முறையல்ல. அதிமுக அதனை செய்தது இல்லை. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
அவர்களுக்கு சாதகமாக இல்லையென்றால் எந்தவொரு கீழ்த்தரமான லெவலுக்கும் இறங்குவார்கள், உதாரணம் சமீபத்திய திருப்பரங்குன்ற தீர்ப்பு...
இவர் ஆட்சி நடந்து இருந்தால் இந்நேரம் தேசிய கீதத்திற்கு பதில் வந்தே மாதரம் பாடி இருப்பார்களா
அமலாக்கத்துறை நேரு மீது வண்டி வண்டியாக ஆதாரங்களுடன் ஊழல் புகாரளித்தும் FIR பதியவில்லை. இப்படிப்பட்ட அரசு எதற்கு?.
அதிமுக ஆட்சியில அமைச்சர்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆளுநர் இத்தனை வருடங்களாக கையெழுத்து போடாம இருக்காரே அதை பற்றி தங்களின் கருத்து
இவர் ஆட்சி நடந்தால் தமிழகத்தை இந்நேரம்...... இவரை தமிழக மக்கள் அறிய வேண்டும்
CAG சொல்லியது 765000000000 கோடி ஊழல், ஒரு கிலோமீட்டர் ரோடு போட 290 கோடி செலவு என்று இதன் மீது எல்லாம் வண்டி வண்டியாக ஆதாரங்களுடன் ஊழல் புகாரளித்தும் FIR பதியவில்லை. இப்படிப்பட்ட ஒன்றிய அரசு எதற்கு?. ஜனாதிபதி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லைமேலும்
-
ஜனநாயகன் விவகாரத்தில் தணிக்கை வாரிய தலைவரின் முடிவே இறுதியானது: ஐகோர்ட்டில் வாதம்
-
இப்போது அவர் எனது பாஸ்; நிதின் நபின் பதவியேற்பு விழாவில் மோடி பேச்சு
-
ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்சம்; அமைச்சர் நேரு சாதனை என பட்டியலிட்ட அண்ணாமலை
-
சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த கவர்னர் உரை: முக்கிய அம்சங்கள் என்ன?
-
ரூ.366 கோடி சட்ட விரோத பணப் பரிமாற்றம்; அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை மூன்றாவது குற்றச்சாட்டு
-
பாஜ தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நபின்; விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு