ஜனநாயகன் விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்
சென்னை: வாரிய தலைவர் தான் இறுதி முடிவு எடுப்பார். ஜனநாயகன் படம் விவகாரத்தில் இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை என ஐகோர்ட்டில் தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்தது.
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் சிக்கியுள்ளது. தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.ஐகோர்ட் தனி நீதிபதி தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால், அதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஐகோர்ட் அமர்வு தடை விதித்தது. இந்த வழக்கு இன்று (ஜனவரி 20) காலை மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ''மண்டல சென்சார் போர்டில் யார் படத்தை பார்த்தார்கள். படத்தை பார்த்து சட்டப்படி ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது'' என நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பி உள்ளது.
அப்போது தணிக்கை வாரியம் தரப்பில் கூறியதாவது: படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்துள்ளது. தணிக்கை வாரிய தலைவர் தான் இறுதி முடிவு எடுப்பார். படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க மும்பையில் உள்ள அதிகாரிகளுக்கே அதிகாரம்.
14 காட்சிகளை நீக்கிய பின் படத்தைப் பார்த்து முடிவெடுக்கப்படும் என கூறினோம். 14 காட்சிகளை நீக்கிவிட்டதால் தணிக்கைச் சான்று வழங்க கோரினர். இறுதி முடிவு எடுப்பதற்கு முன், படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், படத்திற்கு எதிராக கொடுத்த புகார் குறித்து எந்த தகவலும் கொடுக்கவில்லை. படம் மறு ஆய்வுக்கு அனுப்புவதாக மட்டுமே தகவல் வந்தது. ஜன.,9 ல் வெளியிட முடிவு செய்ததால் அவசர வழக்காக முறையிடப்பட்டது.விதிகளை ஆய்வு செய்தே தனி நீதிபதி ஆய்வு செய்து தான் உத்தரவிட்டார். அவரது உத்தரவில் எந்தத் தவறும் இல்லை. தணிக்கை வாரியத்தின் உத்தரவு இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை.படத்தை பார்வையிட்ட குழுவினர் ஒரு மனதாக சான்று வழங்க பரிந்துரைத்தனர். படத்தை பார்த்த பிறகு தங்களது கருத்துக்களை பதிவு செய்திருக்க வேண்டும். படத்தை பார்த்து வீட்டுக்கு சென்றுவிட்டு 4 நாட்கள் கழித்து புகார் அளிக்க முடியாது. புகாரில் கூறப்பட்ட காட்சிகள் மன்னதாகவே நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் நீக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சான்று வழங்குவது தொடர்பாக தகவல் தெரிவித்து விட்டால் 2 நாளில் வழங்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அன்றைய தினமே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. எங்களுக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை என வாதிட்டார்.
தணிக்கை வாரியம், '' வழக்கு தாக்கல் செய்திருக்காவிட்டால் படம் மறு ஆய்வு செய்யப்பட்டு இருக்கும். மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, எனத் தெரிவிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி,''தணிக்கை வாரியத்துக்கு போதுமான அவகாசம் அளித்து இருக்க வேண்டும்.படத்திற்கு எதிராக புகார் யாரிடம் இருந்து கிடைத்தது,'' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு தணிக்கை வாரியம், '' மும்பையில் உள்ள தணிக்கை வாரிய தலைவரிடம் இருந்து கிடைத்தது'' என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம், '' ஒரே நாளில் நீதிமன்ற நடைமுறைகளை முடித்து உத்தரவு தர வேண்டும் என்பதை ஏற்க முடியாது.,'' என்றனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
வாசகர் கருத்து (9)
ngopalsami - Auckland,இந்தியா
21 ஜன,2026 - 00:29 Report Abuse
ஒரு சினிமாவை வைத்து இந்த மட்டரகமான அரசியலை யார் செய்தாலும் அது கீழ்த்தரமான அரசியலே. சீப்பை மறைத்துவிட்டால் கல்யாணம் நின்று போகுமா? இவர்கள் செய்வது ஒவ்வொன்றும் விஜய்க்கு சாதகம்தான். 0
0
KavikumarRam - Indian,இந்தியா
21 ஜன,2026 - 07:36Report Abuse
இதே சினிமாவுல தான் சிங்கப்பூர்ல வரியே கிடையாது, அனைத்தும் இலவசம்னு இந்தியாவுக்கு எதிரா முட்டாத்தனமா விஜய் பேசும் வசனம் வந்துச்சு. அது எவ்வளவு பெரிய புரட்டு. அந்த மாதிரி கடைசி படம்ங்கிறதுனால ரொம்ப ஓவரா பேசிருப்பானுங்க. அதான் வச்சு செய்யிறானுங்க போல. இப்பவே 18 கட் விழுந்திருக்கு. அதுக்கும் படக்குழு பம்மிக்கிட்டு ஒத்துக்கிட்டனுங்கங்கிறதுலேயே படம் முழுசும் ஓவரா பேசிருக்காங்கிறது நல்லா தெரியுது. 0
0
Reply
Saran - pondichery,இந்தியா
20 ஜன,2026 - 23:52 Report Abuse
TN slaves you critizise always any one who want to save you like the captain. You born to suffer with darvida politicians. Elect again uncivilised and uneducated idiots in 2026….If you go out of TN no one will respect you…please don't come to abroad. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
20 ஜன,2026 - 20:20 Report Abuse
என்னதான் வழக்கு முடிந்து படம் வெளிப்பட்டாலும் ஒரு இரண்டு வாரத்துக்குமேல் ஓடுமா? 0
0
Reply
Venkatesan Ramasamay - ,இந்தியா
20 ஜன,2026 - 19:27 Report Abuse
தங்கம் இருக்க ..இருக்க ...அதன் மதிப்பு கூடிக்கொண்டே ... போகுறமாதிரி ....உனக்கும் உன்னுடைய ஜனநாயகம் படத்துக்கும் ... மதிப்பும் ..கூடிக்கொண்டே போகும் தலைவா.. வெற்றிமீது வெற்றி வந்து உண்ணெய்சேரும் ... 0
0
Reply
Vasan - ,இந்தியா
20 ஜன,2026 - 17:39 Report Abuse
விஜய் அவர்கள் நினைப்பது என்னவென்றால், படம் இப்பொழுதே ரிலீஸ் ஆகி விட்டால், மே மாத தேர்தலின் பொழுது அது மக்கள் மனதில், நினைவில் இருக்காது.
எனவே பட ரிலீஸ் ஏப்ரல் கடைசியில் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். எனவே இழுத்தடிக்கதற்காகவே, இந்த கோர்ட், கேஸ் எல்லாம். 0
0
Reply
முருகன் - ,
20 ஜன,2026 - 16:48 Report Abuse
OTT யில் அனைத்து தீமைகளும் உள்ள தொடர்கள் சினிமாக்கள் எந்த விதமான தடங்களும் இல்லாமல் வெளியாகிறது
இங்கே ஆயிரம் கேள்விகள் அரசியல் தலையீடுகள் வேறு
உச்சநீதிமன்றம் இன்றே தீர்ப்பு கொடுக்க வேண்டும் என கூறிய பிறகும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஏன் ? 0
0
Kalyanaraman Subramaniam - ,
21 ஜன,2026 - 10:43Report Abuse
உச்ச நீதிமன்றம் இன்றே தீர்ப்பு கொடுக்கணும்னு சொல்லலை... விஜய் குருப் கிட்ட "நீங்க உயர்நீதிமன்றதுக்கு 20ஆம் போயிட்டு வாங்கனுதான்" சொல்லியிருக்கு. 0
0
Reply
GMM - KA,இந்தியா
20 ஜன,2026 - 14:43 Report Abuse
தணிக்கை வாரியம் போன்ற நிர்வாக அமைப்பு இருக்கும் போது, வழக்கறிஞர்கள் ஏன் இதில் வலை வீசுகிறார்கள். தணிக்கை வாரியம் வழக்கு செலவுகளை வசூல் செய்த பின் தான் பதில் தாக்கல் செய்ய வேண்டும். தணிகை வாரிய தலைவருக்கு அதிகாரம் வழங்கிய பின் அவர் முடிவு இறுதி. தேர்தல் ஆணையம் போன்ற நிர்வாக அதிகாரிகள் மீது நீதிமன்றம் அதிக அதிகாரம் செலுத்த விரும்புவது, நல்லதல்ல. நீதிபதிகளை விட வழக்கறிஞர்கள் தன் சுய நலத்திற்கு அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். டாக்டர் நர்ஸ் உறவு போல் நீதிபதி, வக்கீல் உறவு முறை. தலைமை செயலர், முதல்வர் போல் உள்ளது. 0
0
Reply
மேலும்
-
இதுவரை 110 பேர் பலி!
-
கர்நாடகாவிலும்! சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் வெளிநடப்பு:
-
ராய்ப்பூரில் 'விசில்' சத்தம் பறக்குமா... * இந்தியா மீண்டும் வெல்லுமா
-
குஜராத் மூன்றாவது வெற்றி * உ.பி., அணி ஏமாற்றம்
-
ஐ.சி.சி., மீது வங்கதேசம் கோபம் * உலக கோப்பை பிரச்னையில்...
-
இலங்கை அணி முதல் வெற்றி * வீழ்ந்தது இங்கிலாந்து
Advertisement
Advertisement