பாஜ தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நபின்; விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
புதுடில்லி: பாஜ தேசிய தலைவர் பதவிக்கு செயல் தலைவர் நிதின் நபின், 46, மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து, போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று அவர் முறைப்படி பொறுப்பேற்றார்.
பாஜ தேசிய தலைவராக, 2020ம் ஆண்டு ஜனவரியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் விதிகளின் படி, தேசிய தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். 2023ல் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தலையொட்டி நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை, பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப் படவில்லை.









பதவியேற்பு
வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், பா.ஜ.,வின் தேசிய தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜனவரி 20) பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், அக்கட்சியின் தேசிய தலைவராக நிதின் நபின் முறைப்படி பொறுப்பேற்றார்.
இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், பாஜ ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்று நிதின் நபினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பா.ஜ.,வில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுவதால், தேசிய தலைவராக பொறுப்பேற்றதும், பீஹார் அமைச்சர் பதவியை நிதின் நபின் ராஜினாமா செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த நிதின் நபின்?
* ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 1980 மே 23ல் நிதின் நபின் பிறந்தார். இவர் மறைந்த பாஜ தலைவர் நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவார்.
* கடந்த 2006ல் பாட்னாவின் பாங்கிபூர் தொகுதியில் வென்று பீஹார் சட்டசபைக்கு முதல்முறையாக தேர்வானார். 4 முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.
* இவருக்கு பீஹாரின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
* இவர் ஏற்கனவே பாஜ இளைஞர் அணியின் தேசிய பொதுச்செயலாளர், பீஹார் பாஜ மாநில தலைவர் போன்ற பதவிகளை வகித்து இருக்கிறார். அவர் இன்று தேசிய தலைவர் பதவிக்கு உயர்ந்து இருக்கிறார்.
தலையாட்டி பொம்மை தயாராகி விட்டது போல் உள்ளதே!
Its not DMK
200 ops active
வீட்டுக்குள்ள நுழைவதே வேணுவுக்கு வேலையா போச்சு....
இந்தியாவில் விரைவில் ஒரு கட்சி ஆட்சி முறையினை கொண்டுவர பாரதிய ஜனதா தலைவருக்கு வேண்டுகோளுடன் வாழ்த்துக்கள்
பேருக்கு தான் நீங்கள் எல்லாம் கிட்சன் கேபினெட் decide செய்வார்கள் , என்று முன்னாள் தலைவர் mind வாய்ஸ் கேட்குதா கேட்குதா
தங்கள் குடிமக்கள், சுற்றுச்சூழல் மற்றும் பரந்த உலகத்துடன் தொடர்புடைய விஷயங்களில் நாடுகள் தங்கள் அதிகாரத்தை எவ்வளவு பொறுப்புடன் பயன்படுத்துகின்றன என்பதை அளவிடும் ஒரு புதிய உலகளாவிய கட்டமைப்புமான பொறுப்புள்ள நாடுகள் குறியீட்டில், 154 நாடுகளில் இந்தியா 16வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தக் குறியீடு திங்களன்று வெளியிடப்பட்டது. இதில் சிங்கப்பூர் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்த இடங்களிலும் உள்ளன.
பொறுப்புள்ள நாடுகள் குறியீடு RNI என்பது உலக அறிவுசார் அறக்கட்டளையின் ஒரு முன்முயற்சியாகும். இது மூன்று ஆண்டு கால கல்வி மற்றும் கொள்கை ஆய்வின் விளைவாகும். பொருளாதார அளவு, இராணுவ பலம் அல்லது புவிசார் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பாரம்பரிய உலகளாவிய தரவரிசைகளைப் போலன்றி, RNI ஆனது தேசிய வெற்றியின் மைய அளவுகோலாகப் பொறுப்புடைமைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.மேலும்
-
ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத சீதாஷ்ண நிலை; 16 அடி உயரத்துக்கு பனி கொட்டியதால் மூழ்கிய நகரம்
-
'நாங்கள் மட்டுமே வரி விதிப்போம் நீங்கள் பதில் வரி விதிக்கக்கூடாது': அமெரிக்க நிதியமைச்சர்
-
ஆந்திராவில் அரசு பஸ்களில் 50 லட்சம் பேர்; ஒரே நாளில் ரூ.28 கோடி வருவாய் ஈட்டி சாதனை
-
3 லட்சம் பயணிகள் பாதிப்பு: இண்டிகோ மீது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கடுமையான நடவடிக்கை
-
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறதா? கிரிஷ் சோடங்கர் சொன்ன பதில்
-
இந்தியா உடன் விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன் தலைவர் நம்பிக்கை