திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறதா? கிரிஷ் சோடங்கர் சொன்ன பதில்
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறதா என்ற கேள்விக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என்று பதிலளித்துள்ளார்.
சென்னையில் தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது;
காங்கிரசில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் புதியதாக மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் செயல்பாடுகள் 6 மாதங்கள் கண்காணிக்கப்படும். சரியாக பணியாற்றவில்லை என்றால் அவர்கள் மாற்றப்படுவார்கள்.
சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. விருப்ப மனு அளித்தவர்களிடம் விரைவில் நேர்காணல் செய்யப்படும். அதன் பின்னர் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள்.
திமுக கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்துகளை தலைமை கேட்டுள்ளது. அனைவரும் அவரவர் விருப்பங்களை கூறி உள்ளனர். அந்த கருத்துகளின் அடிப்படையில் கட்சி தலைமை முடிவு செய்யும்.
இவ்வாறு கிரிஷ் சோடங்கர் கூறினார்.
உங்களுக்கு அவணுங்கள விட்டா வேற ஆல் இல்லை? இவணுங்களுக்கு அவனுங்களை விட்டா வேற ஆலுங்க இல்லை?
யோவ், எந்த காலத்தில் ஐயா கூட்டணி பற்றி மாநில தலைவர்கள் முடிவு செய்ய காங்கிரீ மேலிடம் சுதந்திரம் கொடுத்துள்ளது ?. இந்திரா காந்தி வந்தபின் மேலிடம்மட்டுமே முடிவு செய்யும் ஒரு வேலை வரவேண்டியதெல்லாம் வந்த பிறகுதான் முடிவு செய்வார்களோ. ஒரு ஜெஞ்சுக்காகவாது ஒருதடவை மாற்றி சொல்லமாடீர்களா ?
who are those THALAIMAI, When will you make decisions except that family
யார் இந்த வடக்கன் ...விடியல் கூட்டணி பற்றி முடிவு செய்ய வடக்கனை தவிர்த்து வேற யாரும் கிடையாதா ??.......இத்தாலி உத்தர பிரதேசம் வடக்கன் தவிர்த்து விடியலுக்கு வேற யாரும் கூட்டணி இல்லையா ??...
யார் இந்த வடக்கன் ??....விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலாம் ..... அது என்ன தமிழ் நாட்டுக்கு வந்து வடக்கன் நேர்காணல் பஞ்சாயத்து ??....வடக்கு மாநிலங்களில் உள்ள மூடர் கூட்டம் போல தமிழ் நாட்டில் கிடையாது ..இது விடியல் திராவிடன் உருவாக்கிய படித்து முன்னேறிய மாநிலம் .... இத்தாலிக்காரன் பஞ்சாயத்து இங்கு எடுபடாது ....மேலும்
-
அமைச்சர் நேரு துறையில் பணியிட மாறுதலுக்கு ரூ.366 கோடி லஞ்சம்: டி.ஜி.பி.,க்கு ஈ.டி., கடிதம்
-
டெக்னிக்கல்அனாலிசிஸ் 25,100- புள்ளிகளில் சப்போர்ட் கிடைக்கலாம்
-
10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
-
பொங்கல் பரிசு வாங்க முடியாமல் தவிக்கும் வெளியூர் வாசிகள்
-
மத்திய அரசு ஊழியருக்கு எதிரான ஊழல் புகாரை மாநில போலீசார் விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்
-
முஸ்லிம் நாடுகளுடன் சேர்ந்து 'இஸ்லாமிய நேட்டோ' அமைக்க பாகிஸ்தான் முயற்சி